RSS

Monthly Archives: April 2011

Pirates – Deep from the History

கடல் கொள்ளையர்

உலக சரித்திரத்தில் எந்த திசையைப் பார்த்தாலும் ஒரே ஒரு தரப்பினரின் பெயர்மட்டும் நீக்கமற நிரைந்துள்ளனர். அந்த தரப்பினர் – கடல்கொள்ளையர்கள்.

மனிதர்கள் கப்பலை வர்த்தகத்திற்கு பயன்படுத்த தொடங்கியவுடனே கடல்கொள்ளையர்களும் களத்தில் குதித்துவிட்டார்கள். கொள்ளையர்கள்என்பதற்காக இவர்களை கீழ்தரமாக எண்ணிவிடக்கூடாது. இவர்களுக்கென்று தனி கடற்பகுதி, தனிக் கொடி, தனி சட்டதிட்டங்கள் என தனி சாம்ராஜியத்தையே ஒவ்வொரு கொள்ளையர்களும் அமைத்திருந்தனர்.

ஆரம்பத்தில் நீர், உணவு, உடை என அத்தியாவசியங்களை திருடியவர்கள் பின் தங்கம் வைரத்துடன் நிற்காமல் மனிதர்களை கடத்தி பணையத்தொகை வசூலிக்கவும், அடிமையாக விற்கவும் ஆரம்பித்தார்கள்.

இப்படித்தான் கிமு முதலாம் நூற்றாண்டில் சில்சிய கடல்கொள்ளையர்கள் ஜூலியஸ் சீசரையே பணையக் கைதியாக கடத்தினார்கள். ‘என்னதான் தான் கைதியென்றாலும், தனக்கு ராஜமரியாதை அளிக்கப்பட்டதாக’ சீசரே தன் வாழ்கை வரலாற்றில் கூறுகிறார்.
கடற்கொள்ளையர்களுடன் சீசர்

ரோம் அரசாங்கத்திடம், சீசரை விடுவிக்க 20 கோப்பைகளில் தங்கக்காசுகள் கேட்கபட்டபோது, அது தன் தகுதிக்கு குறைவானது என்று கொள்ளையர்களை 50 கோப்பைகள் கேட்கச்சொன்னார் ஜூலியஸ். அப்படியே கேட்டு, அதனை அரசாங்கமும் கொடுத்து, சீசரை மீட்டது. சீசர் நாடுதிரும்பியவுடன் செய்த முதல் காரியம்.. பெரும் படையை அனுப்பி அத்தனை கொள்ளையர்களையும் பிடித்து கடற்கரையிலேயே சிலுவையில் அறைந்தார்.

க.கொள்ளையர்கள் ஒவ்வொருவரும் தமக்கென்று ஒரு கொடி வைத்திருந்தாலும் ‘ஜாலி ரோகர்’ (Jolly Roger) என்ற மண்டைவோடும் இரண்டு எலும்புகளும் பொருத்தப்பட்ட கொடியே பிரதானமாக கடல்கொள்ளையர்களுக்கு அமைந்துவிட்டது. (இந்த கொடியை பின் காமிக்ஸும் சினிமாவும்தான் அதிக பிரபலப்படுத்தியது.)
Jolly – Roger

மேலும் கடல்கொள்ளையர்கள் பெரும்பாலும் ஒற்றை கண்ணை கருப்பு துணி ஒன்றால் மறைத்துகட்டப்பட்டவர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். இதற்கு உண்மையான காரணம் – க.கொள்ளையர்களின் உணவில் விட்டமின் ‘C’ குறைவாக இருந்ததனால் ‘கிரிக்கட்’ என்னும் நோய் ஏற்பட்டு தங்கள் ஒற்றை கண்ணை இழந்ததே!

மக்கள் ஹீரோவாக ஏற்றுக்கொண்ட பல க.கொள்ளையர்கள் சரித்திரத்தில் உண்டு. குறிப்பாக ‘பிளாக்பியர்டு’ (Blackbeard). நீண்டு தொங்கும் சுருள் தாடி, புகை வரும் குல்லாய் என ஒரு ‘ஸ்டைல் ஐகா’னாக இருந்தவன் இந்த ‘பிளாக்பியர்டு’ (நிஜப்பெயர் – எட்வர்ட் டீச்). சக்கரை நோயால் தன் ஒற்றைகாலை இழந்து, இவன் கட்டைகால் பொருத்திக்கொள்ள, பின் வந்த பல கொள்ளையர் இந்த ‘கட்டைகால் ஃபேஷனி’ல் மயங்கி தாங்களும் அதை பொருத்திக்கொண்டனர்.
Blackbeard

தொழில் ரீதியிலும் தனக்கென்று தனி வழியை கடைபிடித்தான் பிளாக். முதலில், அருகில் வரும் கப்பல் எந்த நாட்டுடையதென்று கண்டுபிடித்து அந்த நாட்டின் கொடியை தன் கப்பலில் பறக்கவிடுவான். அந்த கப்பல் நட்புறவாடி அருகில் வந்ததும் தன்னுடை நிஜக் கொடியை பறக்கச்செய்து அவர்களை பீதியடையச் செய்வான். அதன்பின் பெரும்பாலும் அனைத்து கப்பல்களும் இவனிடம் சரணடைந்துவிடும்.

பெண் க.கொள்ளையர்களும் சரித்திரத்தில் தங்களுக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துவிட்டனர். சைனாவைச் சேர்ந்த ஷிங் ஷூ என்பவளிடம் மட்டும் 1800 கப்பல்கள் இருந்தது.

 ஏறத்தாழ அத்தனை க.கொள்ளை கூட்டமும் மறைமுகமாக ஏதோவொரு அரசாங்கத்தின் துணையுடன்தான் செயல்பட்டது என்பதை சரித்திரம் சுட்டிக்காட்டுகிறது. பிரான்ஸிஸ் டிரேக் என்னும் கடல் கொள்ளையன் முதலாம் எலிசபெத் ராணிக்கு இரண்டு கோடி மதிப்புள்ள தங்க நாணயங்களை (16ஆம் நூற்றாண்டு) மாமூலாக தந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைக்கும் கம்போடியாவிலும் சொமாலியாவிலும் கடல் கொள்ளையர், நம் இந்திய கப்பல்கள் உட்பட பன்னாட்டு கப்பல்களை களவாடுவது வருத்தமான ஒரு நிகழும் சரித்திரம்.
 

How about a Coffee!!

“Coffee should be black as hell, strong as death and sweet as love”

“COFFEE?” is an aubade that gives a perfect break to every dawn’s prolonged doze. The word that awakens people’s senses every morning the very moment one hears of it and they start reliving the day only after tasting it. This particular fanciful word, serves good for multitude of other purposes like calling our dear one for an outing, a relaxation after a hard day, a refreshment for making oneself involved with the doing, be it a matter of welcoming our kith and kin at home or a reason for gang of friends to hang around, etc, though it need not be for a coffee always.

COFFEE AND HEALTH:
  • Coffee can be beneficial at about 1-2 cups per day. Health experts say if you were to drink 80 to 100 cups, real fast and all at once, it might do the trick of killing one. So technically coffee or caffeine in it is not into killing you.
  • Coffee contains important anti-oxidants and it is amazing to find that it is actually the anti-oxidants that make coffee taste bitter and not the caffeine.
  • Coffee is a health drink with pretty amazing properties if it is not over dosed. Drinking coffee may reduce the risk of
– developing the most common form of diabetes. – appears to lower the risk of developing skin cancer. – death from liver disease.

  • Special studies conducted about the human body revealed it will usually absorb up to about 300 milligrams of caffeine at a given time. About 4 normal cups. Additional amounts are just cast off, providing no further stimulation. Also, the human body dissipates 20% of the caffeine in the system each hour.
  • Recent research suggests that drinking some amount of coffee each day can result in addiction. Caffeine is a drug and your body will adjust to it. Coffee addiction can cause loss of sleep, depression, chronic headaches, increased blood pressure and blood sugar, and more.

As per the natural fact of double faces of whatsoever or whomsoever concerned, coffee too has got its better and worse part and its all left to the coffee-worshipers to cling on to what they feel as the best.

INTERESTING FACTS:

  • Do u know that coffee has no calories? It is naturally a no calorie drink.
  • Coffee is actually a fruit. Its a cherry containing the seed (berries) called as pips.
Coffee fruit
  • Worldwide, about 1400 million cups of coffee are drunk everyday of which 91% of coffee consumed is taken at breakfast, and sometimes is breakfast.

    • Many are hooked on coffee to stay awake at night. So its better not to drink coffee up to 6 hours before you plan to retire.
    • 1 kilogram of roasted coffee requires 4,000 – 5,000 coffee beans.
    • A Belgian man lived in Guatemala by the name George Washington, invented instant coffee in 1906.
    • The first coffee advertisement was a handbill distributed in 1651. It is now housed in the British Museum.
    • It was in 1530 that the first coffeehouse was opened in Damascus, Syria.
    • The word “coffee” was at one time a term for wine, but was later used to describe a black drink made from berries of the coffee tree.
    • Caffeine is on the list of prohibited substances by International Olympic Committee. Athletes who test positive for more than 12 micrograms of caffeine per milliliter of urine may be banned from the Olympic Games. This level may be reached after drinking about 5 cups of coffee.
    • In December 2001 Brazil produced a scented postage stamp to promote its coffee – the smell should last between 3 and 5 years.
    Scented postage stamp
    • Coffee can actually be used to fuel a car, though maybe not very efficient at this moment, it is nice to know that there is an alternative.
    • Beethoven, who was a coffee lover, was so particular about his coffee that he always counted 60 beans for each cup when he prepared his coffee.
    • “Coffee Day” is actually celebrated as a holiday in Costa Rica on September 12th and in Ireland on September 19th, and Japan actually has “Coffee Day” on October 1st.
    • Turkish bridegrooms were once required to make a promise during their wedding ceremonies to always provide their new wives with coffee. If they failed to do so, it was grounds for divorce!



    WORLD RECORD:

    First Guinness world record has been set for the largest coffee cup at Vietnam on December 15 2007, containing 3,604 litres (30,000 cups) of coffee made with 801 kilos of instant coffee powder and 4,000 litres of boiled water, which is broken,the current record is: the largest cup contained 4,143 litres (32,160 cups) of coffee at Columbia, on 11 October 2007.

    Coffee treat will be back at your dining table with few more enriched flavors to enjoy with… Keep looking for the same…:)
     

    Puthiya Seithi !

    புதிய செய்தி !!
    45  நாள்  மீன்பிடிக்க
    தமிழக மீனவர்களுக்கு,   
    இந்திய எல்லையில் தடை.

    சிங்கள கடற்படை துக்கம்!   


     
    1 Comment

    Posted by on April 21, 2011 in Haikoo, Prasanna Subramanian

     

    நானும்..! என் காதலியும்..!

    நானும்..! என் காதலியும்..!

    நான் அவளுக்காக காத்திருக்கிறேன்.

    மாலை நேரம்… அவள் வருவதாக சொன்ன பூங்கா… இன்று என் காதலியிடம் என் காதலை சொல்லபோறேன்.

    எங்கிட்ட ரோஜா இல்ல. க்ரிட்டிங் கார்டு கூட இல்ல. நம் பெண்களுக்கு கேட்பரி சாக்லேட் பிடிக்கும் என்பது பொது விதி. அவளுக்கும் பிடிக்கும். ஒரு ‘கேட்பரி’ யுடன் உட்கார்ந்திருக்கிறேன் அவள் வருகைக்காக… நானும் இந்த ‘கேட்பரி’ மட்டும் காத்திருக்கல… அந்த சைக்கிள் பழகும் குழந்தை, சென்ற கணம் இறந்து சாலையில் கிடக்கும் இந்த மஞ்சள் பூக்கள்.. வாழ்ந்து முடித்த வாக்கிங் தாத்தா.. ஏன்னா அவளை நான் மட்டும் ரசிக்கல. இங்க எல்லாம்.. ஏன் அவள பார்த்திருந்தால் நீங்களும் ஒரு கேட்பரியுடன் என் பக்கத்தில் உக்கார்ந்திருப்பீங்க. அவ அவ்வளவு அழகு.

    பவித்ரா.. அவ பேரு. இரட்டை கோபுரத்தை இடிச்ச ஒசாமா கூட அவளை பார்த்தால் தாஜ்மஹால் கட்டுவான்!. அவ தான் அழகு.. அது தான் அழகு. அவ பின்னாடி வருபவர்கள் எங்கேயாவது இடிச்சுக்குவாங்க.. அது ஏன்னு அவ பின்னாடி நடந்த பிறகு தான் தெரிஞ்சுகிட்டேன். அவ கலரு ஆசையா இருக்கும். கண்ணு உருண்டையா இருக்கும். ஒரு அருவி பேசினா எப்படி இருக்கும்!.. அவ அப்படித்தான் பேசுவா.

    அவள எனக்கு என் கல்லூரி ஆரம்ப நாட்க்களில் இருந்து தெரியும். இறுதி ஆண்டு இன்று வரை என் உயிர் தோழி அவள். உங்களுக்கு ஒன்னு தெரியுமா..அவளை கட்டிபிடுச்சுருக்கேன்… ஒன்னா பெட்ல தூங்கியிருக்கேன்… அவ உள்ளாடையை கூட என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியும்.. அவ்வளவு நெருக்கம் அவளிடம்.

    அவ எப்போதும் சிரிச்சிட்டே இருப்பா. எப்போழுதாவது அழுவாள். கெட்ட வார்த்தை கூட பேசுவாள். அழகாக எழுதுவாள். அவ கூட இருந்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும் . அவ கூட இருந்து அவள காதலிக்கலைனா தான் அது ஆச்சரியம்.

    இன்னிக்கு என் காதலை சொல்லனும்னு முடிவு பண்ணிட்டேன். இந்த காதலை சொல்லாம தூக்கத்தில் கனவு கூட வரமாடேங்குது. அவளிடம் எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. ஆனால் அவளது ஆடை கடந்த சுதந்திரம் வேண்டும். அவள் என் காதலியாக.!

    இதோ அவ வரமாதிரி தெரியுது. அவ தான். தேவதையாய் வெள்ளை சுடிதாரில் வராலே! அவ தான் பவித்ரா. என் காதல் எதுவும் தெரியாமல் வரா சிரிச்சுக்கிட்டே. கொஞ்சம் பயமா இருக்கு. நானே என் காதலுக்கு தடையா இருக்கேனோ ?..

    ஆம் நானும் ஒரு பெண் தானே!

    Click here if you like this..

     
    4 Comments

    Posted by on April 15, 2011 in Mahesh Ramasamy, Short Stories

     

    The Kiss

    னிதனின் சாதனைகள் எல்லாத் துறைகளிலும் கடலென விரிந்துகொண்டிருக்கும் வேளையில்  சமீபத்தில் நான் கேள்விப்பட்ட ஒரு (உலக) சாதனை, என்னை வெகுவாக கவர்ந்தது.
    அமெரிக்காவில் டேலி-கான்சியலோ ஜோடியின் 33 மணி நேர இடைவிடாத முத்தம் தான் அந்த மகத்தான சாதனை. ‘எவ்வளவு மூச்சுப்பயிற்சி? எத்தனை கவனம்? எத்தனை சத்திழப்பு? எத்தனை உழைப்பு? அடேங்கப்பா!’
                                   முத்தத் திருவிழா 
    ‘அப்படி முத்தத்தில் என்னதான் இருக்கிறது’ என்று கேட்டால், ‘முத்தத்தில் என்ன இல்லை’ என்று ஒட்டுமொத்த மனித கலாச்சாரங்களும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்புகிறது.மனித இனம் மட்டும்மல்ல, சிம்பன்ஸிகள் கூட தங்கள் கைகளை உயர்த்தி இதை ஆமோதிக்கிறது.
    மனிதர்களைப் போலவே துணையின் முகம் பார்த்துப் புணரும் சிம்பன்ஸிகளில் கூட, ஆண் சிம்பன்ஸி வெளியே சென்று வீடு திரும்பும் போது, பெண் சிம்பன்ஸியை இறுக அனைத்து சிறிது நேரம் முத்தமிட்டுக் கழிக்கின்றன.

    ‘முத்தமிடுவது உப்புத்தண்ணியை பருகுவது போல. பருக பருக தாகம் அதிகரிக்கும்’ என்று ஒரு சீன பழமொழி உண்டு
    னால், காதல் கலவியைத்தாண்டி ஆப்பிரிக்க பழங்குடியினர், தங்கள் கூட்டத்தின் தலைவன் நடந்து சென்ற இடத்தை முத்தமிட்டு, முத்தத்தை மரியாதை நிமித்தமாகவும் கடைபிடித்தனர்.
    பண்டைய ரோமிலும், பேகன் கலாச்சாரத்திலும் கடவுளுக்கு ‘ஃப்ளையிங் கிஸ்’ கொடுத்து வழிபட்டார்கள்.
    இனுயித்’களும் (எஸ்கிமோ) மலேசியர்களும்,  பாலினேசிய குடிமக்களும் (பசிபிக்தீவுகளில் ஒரு பகுதி- பாலினேசியா) அன்புடையவர்களின் மூக்கோடு மூக்கை உரசுவதை, முத்தமாக கருதுகிறார்கள்.
    ப்லார்னி’ என்னும் கல்லை முத்தமிட்டால் செய்யுங்காரியம் வெற்றியடையும் என்று அயர்லாந்தில் இன்றும் நம்பிக்கை உண்டு.

    இப்படி உலகம் முழுவதும் ஒன்றாக முத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வேளையிலும், அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் மீசைவைத்தவர்கள் (எந்தவொரு சகமனிதருக்கும்) முத்தமிடுவது சட்டப்படிக்குற்றம்!
    மேலும் கணக்டிகட் மாநிலத்தின் தலைநகரமான ஹார்ட்ஃபோர்டில், கணவன், மனைவிக்கு ஞாயிற்றுக்கிழமைகளில்    முத்தமிடக்கூடாது . இதுவும் அந்த மாநிலத்தின் சட்டம் !!
    முத்தத்தை முதலில் எழுத்துக்களில் கொண்டுவந்த பெருமை இந்தியர்களையே சேரும்நான்கு வேதங்களிலும் முத்தத்தை பற்றிய குறிப்புகள் உண்டு. வாத்சாயனர் முத்தத்துக்கென்றே தனி அதிகாரம் படைத்து முத்தத்தை முப்பது வகையாக பிரித்திருக்கிறார்

    னால் உலக புகழ்பெற்ற முத்தத்தை வழங்கிய நாடு ஃபிரான்ஸ் தான். ‘ஃபிரென்ச் கிஸ்’ – இதழோடு இதழ் இணையும் இந்த முத்தத்தைதான்  ‘‘ன்மாக்களின் பரிமாற்றம்’ என்று உலக மக்கள் கருதுகின்றார்கள்.
    சில அறிவியல் ஆய்வுகள்:
    ஒரு நிமிட முத்தத்தில் 26 கலோரிகள் கரைகிறது. (இது ஐந்து நிமிட நடை பயிற்சிக்கு சமம்)
    பிரென்ச் முத்தத்தில் நம் முகத்தில் உள்ள 34 சதைகள் பங்குகொள்கின்றனஇதனால் முகச்சுருக்கங்கள் வருவது குறையும் என்கிறது விஞ்ஞானம்.
    நகக்கண்களை விட 100 மடங்கிற்கும் மேல் மனித உதடுகள் உணர்ச்சியுடையது. (இது நம் பால் உறுப்புகளின் உணர்ச்சிகளை விட அதிகம்!)
    இருவர், இதழோடு இதழ் சேர்த்து முத்தமிடம் போது, அவர்களின் கொளுப்புச்சத்துபுரோடின் போன்றவற்றில் பரிமாற்றம் ஏற்பட்டு, அது அவர்களின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது! இது தெரியாமலா வள்ளுவர் “பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
    வாலெயிறு ஊறிய நீர்” என்று பாடியிருப்பார்.
    மேலும் ஒரு முக்கியமான தகவல் : 
    முத்தமிடுபவர்கள் இருவருக்கும் வாயில் ரத்தகாயம் இல்லாதவரை முத்தமிடுவதால் உறுதியாக ‘எயிட்ஸ்‘ பரவாது.
    இந்த மொத்த தகவலையும்  எழுதுவதற்குள் மேலே சொல்லப்பட்ட உலக சாதனை, ஒரு தாய்லாந்து ஜோடியால் முறியடிக்கப்பட்டுவிட்டது.  

    தற்போதைய சாதனை நேரம் – 46:24:09நீங்களும் முயற்சி செய்யலாம்!