லோரன்ஸ் தனது வேலை நேரம் முடிந்த அடுத்த வினாடி தனது வீட்டினுள் அவசரமாக நுழைந்தான். நெஞ்சம் படபடக்க தனது தொப்பியை கலைந்து காய்ச்சலுற்றுக் கிடக்கும் தனது மகன் ஆல்பெர்ட்டை காண விரைந்தான்.
தன் காதலியின் மறைவிற்குப் பிறகு, அவள் லோரன்ஸிற்காக விட்டுச்சென்ற ஒரே உறவு – ஆல்பெர்ட்
தன் காதலி, ‘எமி’யின் மறைவிற்குப் பிறகு அடுத்தவினாடி வாழ காரணம் இல்லாமல் இருந்த லோரன்ஸிற்கு புதிய உலகமாய், புதிய உயிராய், புதிய வாழ்கையாய் கிடைத்தவன் ஆல்பெர்ட்.
ஆல்பெர்ட்டிற்கு வயது 7ஆகிறது. அவன் வளர வளர, அவன் உருவில் எமி அதிகம் தெரிந்தாள். எமியின் கடல் குடித்த நீலமான கண்களை அப்படியே பிரதியெடுத்து வைத்திருந்தான் ஆல்பெர்ட். அந்த நீலக்கண்கள் – லோரன்ஸிற்கு ஆயிரம் வருடம் வாழ்வதற்கான தெம்பையும், அர்த்தத்தையும் தந்தது.
ஆல்பெர்டிற்கு சிறு காய்ச்சல் வந்தாலும் நிலைகொள்ளாமல் பரிதவிப்பான் லோரன்ஸ். இன்று அவனுக்கு 105 டிகிரி காய்ச்சல். அதனால், இன்று முழுவதும் ஆல்பெர்ட்டுடன் இருந்துவிட முயற்சி செய்தான். இருந்தும் தலைமையின் கட்டாயத்தினால் அவன் விடுப்பு எடுக்கமுடியாமல், வேலையிலும் கவனம் செலுத்த இயலாமல் திண்டாடினான்.
அவன் சக ஊழியர்கள் கூட அடிக்கடி லோரன்ஸை இதற்காக கடிந்துகொள்வதுண்டு. ஒரு குழந்தையின் மீது இத்தனை பாசம் வைப்பது என்றைக்குமே தவறு. எங்களுக்கும் குழந்தைகள் உண்டு. நாங்கள் உன்னைப் போலவா கவலைபட்டுக்கொள்கிறோம். நம்மைப் போன்ற ராணுவ வீரர்கள் இத்தனை இழகிய மனதுடன் இருப்பது பெரும் தவறு. உன் மனதை சற்று கடினமாக்கிக்கொள் லோரன்ஸ். அதுதான் எல்லோருக்கும் நல்லது.
ஆனால் எத்தனை பேர் எத்தனை முறை சொன்னாலும் லோரன்ஸ் மாறுவதாக இல்லை. அவனது ஒரே உலகம் ஆல்பெர்ட் தான்.
காய்ச்சலால் உடல் வெளிரிப்போயிருந்த ஆல்பெர்ட்டை பார்த்தவுடன் லோரன்ஸ் அசைவில்லாமல், அந்த அறையின் நுழைவாயிலிலேயே நின்றுவிட்டான். அந்த சின்ன நீல விழிகளில் ஆல்பெர்ட் அவனை பார்த்ததில், தன்னையறியாமல் கண்கள் கலங்கிவிட்டான்.
அவனருகில் சென்று அவன் முடியைக் கோதி, அவன் நெற்றியில் முத்தமிடும் போது, அவன் இதழ்களில் உஷ்ணம் படர்ந்தது.
தனக்கு தெரிந்த அத்தனை மருத்துவத்தை செயல்முறை படுத்தியும் காய்ச்சல் குறையவில்லை.
ஆல்பெர்ட்டின் பார்வை தூரம் போகப்போக லோரன்ஸின் இதயம் கனமேறியது. இரவு நெருங்குகிறது.
இனியும் தாமதிக்காமல் தன் மகனை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முடிவெடுத்தான்.
‘எத்தனை தொலைவாய் இருந்தால் என்ன? எத்தனை குளிராய் இருந்தால் என்ன? என் மகனைவிட எதுவும் எனக்கு பெரிதல்ல’ என்று ஆல்பெர்ட்டை ஒரு போர்வையில் சுற்றி, தன் கையில் ஏந்தியபடி தெருக்களில் ஓடினான் லோரன்ஸ்.
ஊர் எல்லையில் இருந்த மருத்துவரின் வீட்டை நெருங்கும் போது மணி 9 ஆகிவிட்டது. ஆனால் சிறிதும் காத்திராமல், மருத்துவரை துரிதப்படுத்தி தன் மகனை காப்பாற்றிவிட்டான் லோரன்ஸ்.
மருத்துவர் கூட, என்ன இது லோரன்ஸ். சாதாரன காய்ச்சலுக்கப் போய் இத்தனை ஆர்ப்பாட்டமா? யாரிடமாவது காரை கடன் வாங்கி வந்திருக்கலாமே. நீ கேட்டால் கொடுக்காமலா போவார்கள். இருந்தாலும் நீ உன் மகனிடம் கொண்ட பாசம் அதீதமானது. ஆபத்தாகக் கூட மாறலாம். என்று எச்சரித்து, ஆல்பெர்ட்டுக்கு தேவையான அத்தனை மருந்துகளையும் தந்து, தன் காரிலே லோரன்ஸை வீட்டிற்கு கொண்டு சேர்த்தார்.
அன்று இரவு முழுவதும் ஆல்பெர்ட்டை தன் மார்பிலேயே கிடத்தி, அவன் மீது கொண்ட பாசம், அவனது வருங்காலத்தை பற்றிய சிந்தனைகளிலேயே தூங்கிப்போனான் லோரன்ஸ்.
‘ஒரு குழந்தை தான் ஒருவனது வாழ்வில் எத்தனை அதிசயங்களை ஏற்படுத்திவிடுகிறது ‘
மறுநாள் காலை, புத்துயிர் பெற்ற ஆல்பெர்ட்டின் உச்சியில் முத்தமிட்டு, அவனை பள்ளியின் வகுப்பறை வரை சென்று விட்டுவிட்டு மீண்டும் கலங்கிய கண்களுடன் தனது ராணுவதளத்திற்குச் சென்றான் லோரன்ஸ்.
தனது துப்பாக்கியை சரிபார்த்துக் கொண்டிருந்த லோரன்ஸ் ஒரு தனி அறைக்கு வரவழைக்கப்பட்டான்.
லோரன்ஸின் முன் சில குழந்தைகள் நின்றிருந்தார்கள்.
என்ன பார்க்கிறாய் லோரன்ஸ்? இந்த யூத குழந்தைகளையெல்லாம் கொல்லும்படி ‘ஃப்யூரர்’ உத்தரவிட்டிருக்கிறார். ஃப்யூரரின் உத்தரவு…இம்..யோசிக்காமல் சுடு!
நடுங்கிய கைகளுடன் தன் துப்பாக்கி எடுத்து குறிபார்த்த லோரன்ஸை, மூன்றாவது நின்றிருந்த யூத சிறுமியின் நீலக்கண்கள் சுட்டெரித்தது.
Category Archives: Short Stories
நீலக்கண்கள்
Posted by lovecoffeestories on February 28, 2012 in Prasanna Subramanian, Short Stories
HEAVEN OR HELL ?
Not sure whether it is the land or air, dream or reality and also couldn’t make out whether am awake or asleep, in solitude or in crowd. Everything around created a brand new fresh feeling to sense! Unable to resist this weird experience, tried to get up and walk but with each step I took forward, things around moved front too. It took little time to realize that am going backward with every move made, which is contrary in nature.
Excitement along with wonder urged to know “Where the hell am I ?!?”
It wasn’t the hell actually but an intuition prompted me this is going to be better in one way and worse in another way! Slowly dim light rays emerged from above while am on the move still, creating partial gloomy and cloudy sensation enabling to see through fractionally.
Suddenly from nowhere thousands of people approached me from opposite direction, chanting my name and showering their wishes at me. The whole area appeared to be filled with ecstasy, happiness and all sort of exaltation of spirit inducing one to be overjoyed.
Posted by lovecoffeestories on February 28, 2012 in Karthika Rajendran, Short Stories
மதிப்பு
Posted by lovecoffeestories on February 18, 2012 in Prasanna Subramanian, Short Stories
ORU KUTTY KATHAI!
Posted by lovecoffeestories on January 28, 2012 in Prasanna Subramanian, Short Stories
Thoothan
“பூமிக்கு! அதுதான் உன் கிரகம். அங்கே உனக்காக அத்தனையும் தயார் நிலையில் உள்ளது!”
அங்கே எனக்காக ஒரு சிலுவை நின்றிருந்தது.
Posted by lovecoffeestories on January 23, 2012 in Prasanna Subramanian, Short Stories
ரசனை
“நீ உள்ளே வரலை?”, மஹதி
“உள்ளே சொக்கா போடாதா பொண்ணுகளோட பெயிண்டிங்ஸ் இருக்குமா?” அசடு வழிய கேட்டான் ஆதித்யா.
“ஒழிஞ்சு போ!” பொய்யான கோபத்துடன் மியூசியத்துள் நுழைந்தாள் மஹதி.
இந்த உலகம், இந்த ஆதித்யா, இந்த காதல் என அனைத்தையும் மறந்து, மஹதி அந்த ஓவியத்தில் லயித்திருந்தாள்.
“போன வருஷம், இங்க ஒரு ஷார்ட் ஃபிலிம் பார்தேன். ‘தி எனிமி’ன்னு. இன்னும் மனசுக்குள்ளயே நிக்குது. படத்தோட கேமரா மேனை கட்டிபிடிச்சு வாழ்த்தலாம் போல இருந்தது”
நாட்கள் செல்லச் செல்ல பத்மநாபனின் கலையார்வமும், ரசனையும் மஹதியை அதிகம் ஈர்த்துவிட்டது, இறுதியாக தன் ரசனைகளுக்கு ஏற்ப ஒரு சக ஜீவனை இந்த பூமியில் கண்டுபிடித்துவிட்டதாய் மஹதி உணர்ந்தாள். இந்த முதியவரின் நட்பு அவளுக்கு பரவசத்தை ஏற்படுத்தியது.
ஒரே மாதிரியான ரசனை. ஒரு பெண் எதிர் பார்க்கும் மென்மை, பக்குவம், என தனக்கு இந்த உலகத்தில் ஏற்ற துணை இவர்தானோ என நினைத்தாள். கொஞ்சம் கொஞ்சமாக மஹதி பத்மநாபன் மேல் காதல் கொண்டாள்.
தன் தந்தையை விட வயது மூத்தவராக இருப்பாரோ? இருந்தும் வயது ஒரு பொருட்டில்லை என்று தனனைத்தானே சமாதானமும் செய்துகொண்டாள்.
தன் காதலை அவரிடம் சொல்ல சரியான தருணத்தை தேடிக்கொண்டிருந்த நேரத்தில் மஹதியின் செல்போன் சினுங்கியது .
பலமுறை அழைப்பை துண்டித்தும், மீண்டும் மீண்டும் கத்தியது அந்த செல்போன். இறுதியாக பேசினாள்.
“ஆதித்யா, நான் இங்கு முக்கியமான வேலையாக இருக்கிறேன்! தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாதே.”
“ஆனால் நான் உன்னிடம் ஒரு வாரமாக பேச முயற்சி செய்கிறேன். என்ன ஆச்சு உனக்கு. என்னை மறந்துட்டாயா?”
“நான் உன்னிடம் பேசும் சூழ்நிலையில் இல்லை”
“என்னை மறந்துட்டாயா? இல்லை பிடிக்கலையா?”
எதிரில் அமர்ந்த பத்மநாபன் தன்னை உற்று கவணிப்பதை உணர்ந்த மஹதி, மேற்கொண்டு எதுவும் பேசாமல் செல்போனை ‘ஆஃப்’ செய்துவிட்டு, “என் நண்பன். பணம் கடனா கேட்டு தொல்லை செய்கிறான்.”
பத்மநாபன் புன்னகைத்தார்.
தன் தந்தையின் வார்த்தைகளை அமைதியாக ஏற்றுக்கொண்டான் ஆதித்யா.
முற்றும்
Posted by lovecoffeestories on September 23, 2011 in Prasanna Subramanian, Short Stories
அப்பா
எனக்கு எப்போதுமே என் அப்பாவை பிடிக்கும் தான். ஆனால் அதை வெளிபடுத்துவதற்கான நேரம் தான் கடைசி வரை அமையாமல் போய்விட்டது.
இன்னும் சொல்லப்போனால் அவர் மறைந்த பின் தான் அவரை நான் எவ்வளவு நேசித்தேன் என்பது எனக்கே தெரிந்தது. அதுவும் பிரசவத்துக்காக என் மனைவியை அவள் அம்மா வீட்டிற்கு அனுப்பிவிட்டு தனிமையில் தவிக்கும் இந்நாட்களில் தான் என் அப்பாவின் நினைவுகள் என்னை அதிகம் சூழ்கின்றது.
சராசரியான தந்தை – மகன் உறவு எங்களுக்குள் அமையவில்லை. காரணம்?
நான் சராசரியான மகன் தான். ஆனால் என் அப்பா சராசரியான தந்தை இல்லை.
ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட வயது வரைதான் அறிவை தேடி போகவேண்டும். அதன் பிறகு அவனுக்கான சமுதாய பொறுப்புகள் அவனுக்கு வந்து விடும். ஆனால் என் அப்பாவின் அறிவுத்தேடலே என் அப்பாவை என்னிடம் இருந்து, இந்த உலகத்திலிருந்தே பிரித்து விட்டது. அதுவும் அத்தனை வித்தியாசமான தேடல்!
அவர் கேட்டது – ‘மரணத்திற்குப் பின் என்ன?’ ‘மனிதன் இறந்த பிறகு மீண்டும் உயிர்த்தெழ முடியுமா?’ ‘மறுஜென்மம் உண்டா?’.
இந்த கேள்விகளை புத்தகம் அளவிலே அவர் நிறுத்தியிருந்தால் அவர் நன்றாக இருந்திருப்பார். ஆனால் அவர் உண்மையை தேடி பல எல்லைகளை தாண்டிச் சென்றுவிட்டார்.
ஊரில் எங்கு இறங்கல் செய்தி வந்தாலும், கேமிராவையும் சவுண்டு ரெகார்டரையும் எடுத்திக்கொண்டு சென்றுவிடுவார்.
ஊருக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அவரின் பெயர் கெட்டது. சில நாட்களிலேயே ஊர் அவருக்கு பைத்தியக்காரன் பட்டம் கட்டிவிட்டது. ஆனால் அப்போதும் அவர் தன்னை நிறுத்திக்கொள்ளவில்லை.
ஒரு நாள் நள்ளிரவில் அவரை வீட்டில் காணாமல் தேடி, இறுதியில் சுடுகாட்டில் கண்டபோது தான் எனக்கே கொஞ்சம் பயம் வந்தது. இந்த அகோரமான தேடலை உடனடியாக நிறுத்திக்கொள்ளும்படி நான் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை.
ஒரு நாள் எங்களுக்குள் சண்டை வழுத்தது. அதன் காரணமாக நான் என் மனைவியுடன் வீட்டை விட்டு வெளியேறினேன். அங்கு நின்றது தான எங்கள் உறவும்.
அப்பா மறைந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்ட நிலையில் அவரின் நினைவுகள் நாளுக்கு நாள் அதிகம் ஆகிக்கொண்டே போனது. கனவுகளும் கூட அவர் அவருடை அறையிலிருந்து அழைப்பதைப்போல் அடிக்கடி வந்தது. இறுதியாக ஒரு நாள் அவரின் பூட்டிய அறையை திறந்தேன்.
தூசி அடர்ந்திருந்த அறையில் எங்கு பார்த்தாலும் புத்தகங்கள் தான். அத்தனையிலும் ஏதோ ஒரு விதத்தில் மரணம் இருந்தது. அவருடைய மேசைமேல் மஞ்சள், நீலம், ரத்தச்சிவப்பு என பல நிறங்களில் காய்ந்த ரசாயனங்களும் கண்ணாடிக் கோப்பகளும்.
என் அப்பா ஒருமுறை என்னிடம் கேட்டார். ‘நம்மை விட அறிவியலிலும் கலாச்சாரத்திலும் பல ஆண்டுகளுக்கு முன்னமே முன்னேறிய பண்டைய எகிப்தில் ஏன் இறந்த பிணங்களை பதப்படுத்தி பாதுகாத்தனர்?’
சரியான பதில் தெரியவில்லையென்றாலும் அது மூடநம்பிக்கைகளின் உச்சக் கட்டமென்றே புரிந்தது.
அவர் அலமாரியிலிருந்த புத்தகங்களின் சில அட்டைப்டங்கள் என்னை ஈர்த்தது. நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் ஒவ்வொரு புத்தகமாக படித்தேன். அத்தனையும் பிதற்றல்கள். சாட்சியங்கள் ஏதும் இல்லாத புலம்பல்கள்.
பல புத்தகங்களில் விஞ்ஞானம் கலந்த விக்கிரமாதித்தன் கதைகள். இந்த கதைகளெல்லாம் என் அப்பாவை எப்படி இத்தனைதூரம் கவர்ந்திருக்க முடியும் என்று வியந்துகொண்டேன்.
நாளாக நாளாக அந்த புத்தகங்கள் மூலம் என் அப்பா என்னுடன் உறையாடுவதுபோல் உணர்ந்தேன். முட்டாள்தனம் என்று நினைத்தாலும், அந்த புத்தகங்களில் ஏதோ ஒரு வகையில் ஈர்க்கப்பட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக, அந்த புத்தகங்கள் மூலம், மரணத்தில் ஒரு வசீகரம் இருப்பதாய் உணர்ந்தேன். என் அப்பா என்னிடம் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கத் தொடங்கியது.
அந்த புத்தகங்கள் அனைத்தும் கூறியது, ‘மறைந்த உயிர்கள் இந்த உலகத்தில் மீண்டும் உயிர்க்கும்’ என்பதுதான். ஆனால் ஒரு புத்தகத்தில் உள்ள ஒரு குறிப்பு என்னை அதிகம் கவர்ந்தது.
அது கூறியது, ‘பண்டைய சீன அரசாட்சியான ‘ஹன்’ அரச காலத்தின் மன்னன் ஒருவன் தன் லட்சியத்தை அடையும் முன் தனக்கு முதுமை வந்துவிட்டது என்று சில மூலிகைகளை அரைத்துக் குடித்துவிட்டு இறந்துவிட்டான். பின் அவன் தன் மரணத்தறுவாயில் கூறியது போலவே அதே உடல் அம்சங்களுடன் மீண்டும் பிறந்து அந்த இலட்சியத்தை நிறைவேற்றினான்’ என்றும் இருந்தது.
இதில் எனக்கு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், அவன் இறந்து கிடந்த நிலை.
கண்கள் இரண்டும் சிவந்து , நாசிதுவாரங்களில் வெண்மை படிந்து, நாக்கு மற்றும் கால் நகங்கள் நீலமாய், என அப்படியே என் அப்பாவின் மரண நிலை!!
எனக்கு நடந்தது புரிந்ததுவிட்டது. உடல் வியர்த்தது. என் அப்பா எத்தனை பெரிய காரியத்தை செய்திருக்கிறார்.
இது உண்மையா?
உண்மையாக இருந்தால்?
நினைக்கும் போதே எனக்கு நெஞ்சு படபடத்தது. என் அப்பாவும் மீண்டும் உயிர்த்தெழுவாரா? அந்த புத்தகக் குறிப்பின் அடியில் என் அப்பா கைபட எழுதிய ஒரு வாசகம் என்னை மேலும் நிலைகுழையச் செய்தது.
‘இதை நீ படிப்பாய் என்று எனக்கு தெரியும். அதனால் தான் நான் இந்த முடிவை எடுக்கிறேன். ஆனால் இதில் உன் உதவி எனக்கு தேவை. நான் என் உடலைப் பிரிவது குரு பௌர்ணமியில். அதிலிருந்து சரியாக பதினாலாவது பௌர்ணமியின் போது எனது உடலை தோண்டி எடுத்து , எனது மண்டை ஓட்டை மட்டும் சரியாக இரவு 1.25 மணிக்கு உடைத்து விட வேண்டும். இது உன் தந்தையாக நான் கேட்கும் ஒரே வேண்டுகோள். மறந்துவிடாதே!’
என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நடுங்கிய கைகளுடன் கேலண்டரை எடுத்துப் பார்தேன். ஆச்சிரியம் மீது ஆச்சரியம்! அப்பா குறிப்பிட்ட பதினாலாவது பௌர்ணமி நாளை மறுநாள்.
என் அப்பாவின் நினைவுகளும், அவர் தோன்றிய கனவும், நான் அவர் அறையை திறந்ததும், அவர் புத்தகங்களை படித்ததும், அவர் எழுதிய குறிப்பை சரியான நேரத்தில் படித்ததையும் இயல்பாக, எதேர்ச்சியாக நடந்த நிகழ்வாக என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை.
இத்தனை நாட்கள் என் அப்பா என்னுடன் தொடர்புகொண்டிருந்தாரா?
இதை இதற்கு மேலும் லேசாக விட்டுவிடக் கூடாது.
எனக்கு என் அப்பா வேண்டும். எப்படியேனும் வேண்டும்.
அந்த புத்தகத்தில் இருந்த அத்தனை குறிப்புகளையும் சேகரித்தேன். அவர் குறிப்பிட்டிருந்த அந்த இரவும் வந்தது.
பெளர்ணமி நிலவு உச்சி வானை அடையும் வரை காத்திருந்து பின் என் அப்பாவின் கல்லறையை தோண்ட ஆரம்பித்தேன். அந்த இரவில் நிலவு வெளிச்சத்தில் கல்லறைகள் அனைத்தும் வெள்ளி முலாம் பூசியது போல் இருந்தது. அத்தனை குளிரிலும், என் உடலை வேர்வை நனைத்தது. மனதிற்குள் அப்பா அப்பா என்று சொல்லிக்கொண்டே தோண்டினேன்.
அந்த அழுகிய நாற்றத்தை கூட நான் பொருட்படுத்தாது தோண்டி முடித்தேன். இறுதியில் என் அப்பாவின் மண்டை ஓட்டினை வெளியே எடுத்து சரியாக 1.25 மணியாகும் வரை காத்திருந்தேன்.
இரவை உணரவில்லை. அதன் குளிரை உணரவில்லை. இந்த உலகம் எதுவும் உணராமல் ஒரு கையில் சுத்தியலுடன் என் அப்பாவின் மண்டை ஓட்டை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தேன். சரியாக 1.25 மணியாக இன்னும் இருபது வினாடிகள்தான் இருந்தது.
உள்ளங்கையில் இடைவிடாமல் வியர்த்தது. மணி சரியாக 1.25ஐ அடிக்க என் சுத்தியல் என் அப்பாவின் மண்டை ஓட்டை தகர்த்தது.
வேலை முடிந்ததும் அங்கிருந்து விரைந்து, வீட்டுக்கு வந்து போர்வைக்குள் ஒளிந்துகொண்டேன். நான் செய்த செயலின் தாக்கம் இன்னும் என் மனதை விட்டு துளியும் விலகவில்லை.
‘என் அப்பா என்னை தேடி வரப்போகிறாரா?‘ என் அறையில் மாட்டியிருந்த அவரது ஃபோட்டோவில் அவர் என்னைப் பார்த்து சிரித்தார்.
எனக்கு இதயம் கனமாக தெரிந்தது. பல நாள் தண்ணீர் அருந்தாததைப் போல் தாகம் எடுத்தது. தண்ணீர் குடிக்க நான் அடுத்த அறைக்குச் செல்லும் போது டெலிபோன் அலறியது. சில வினாடிகள் என் இதயம் முழுவதுமாக செயலிழந்து விட்டது.
யார் ஃபோன் செய்வது? அப்பாவா?
நடுங்கிய கையில் ரிசீவரை எடுத்த எனக்கு வாயிலிருந்து வார்த்தை வெளிவரவில்லை.
மறுமுனையிலிருந்து, “ஹலோ, ஜீவா தம்பியா? நான் லட்சுமி பேசறேனுங்க” என்று என் வேலைக்காரியின் குரல் கேட்டது.
இப்போதும் என்னால் வார்த்தைகளை வெளியிடமுடியவில்லை.
லட்சுமி, “தம்பி, நம்ம அம்மாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருச்சுங்க. மூக்குமுழியெல்லாம் அப்படியே நம்ம அய்யாவ உரிச்சு வச்சிருக்குங்க” என்றாள்.
“அப்பா”
Posted by lovecoffeestories on August 27, 2011 in Prasanna Subramanian, Short Stories
தங்கச்சிலுவை !
காய்ந்த ரத்தம், கால்களைத் தொலைத்த செருப்புகள், விட்டுப்போன வெட்டருவாள் வேல்கம்பு என்று அந்த தெரு, முந்தைய இரவு நடந்த கலவரத்திற்கு ஆதாரங்களை சேர்த்துவைத்திருந்தது.
ஒரு மாதம் முன்பு, அந்தோனியார் ஆலயத்தில், அப்போதிருந்த தேக்குமரச் சிலுவைக்கு பதிலாக வரும் தேர் திருவிழாவில் தங்கச் சிலுவை ஒன்றை செய்து, அதை ஊர்வளத்தில் கொண்டுசெல்லலாம் என முடிவெடுக்கப்பட்டு, அதற்காக பணவசூலில் ஈடுபட மெத்தப்பட்டி ஊர் தலைவன் ஃபெர்னாண்டசிடம் பொறுப்பை ஒப்படைத்தார் ஃபாதர் அருள்துரை.
அப்போதிருந்தே மெத்தப்பட்டி ஊர் மக்களுக்கும், கீழத்தெரு மக்களுக்கும் வாக்குவாதம் ஆரம்பித்தது.
தேக்குமரச் சிலுவை போதும் என்றனர் கீழத்தெரு வாசிகள்.
அதெப்படி? மற்ற மதங்களைப்போல் நமது திருவிழாக்களையும் விமர்சையாக கொண்டாவேண்டாமா? நம் கடவுளின் பெருமையை இந்த ஊரறிய செய்யவேண்டாமா என்று கீழத்தெரு மக்களின் வாயடைத்தனர் மெத்தப்பட்டி வாசிகள்.
ஒரு வழியாக அப்போது சமாதானமாகி, கீழத்தெரு மக்களும் தங்கச் சிலுவைக்கான பணவசூலிற்கு பங்களித்தனர்.
தங்களுடை சுயதேவைகளை பொருட்படுத்தாது, உழைக்கும் பணத்தையெல்லாம் ஃபெர்னாண்டசிற்கு அளித்தனர்.
வரப்போகும் தங்கச்சிலுவையால் தங்கள் ஊருக்கும், ஊரின் ஆலயத்திற்கும் கிடைக்கப்போகும் பேரையும் புகழையும் எண்ணி,எப்போதும் இல்லாத வண்ணம், அவர்கள் தேர் திருவிழாவையும், தங்கச்சிலுவையையும் எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் தேர் திருவிழாவில் தங்கச் சிலுவைக்குப் பதிலாக பழைய தேக்குமரச் சிலுவையை பார்த்ததும், கீழத்தெரு மக்களுக்கு கோபம் தலைக்கேறி, என்னதான் ஃபாதரும் ஃபெர்னாண்டசும் கிடைத்த பணம் போதவில்லையென்று காரணம் சொன்னாலும், அதையேற்காமல், வாக்குவாதத்தில் இறங்கி, கைகலப்பு ஏற்பட்டு, இறுதியில் ஏழு பேர் உயிரிழந்து, ஐம்பத்து ஆறு பேர் படுகாயம் ஆகும் வரை தொடர்ந்தது அந்த கலவரம்.
இப்போது அந்த தெருவில் அதிக மக்கள் நடமாட்டம் இல்லை. ஊரில் பாதி பேர் மருத்துவமனையிலும், மீதி பேர் காவல்நிலையத்திலும் உள்ளனர்.
நேற்று இரவு கலவரத்தின் தாக்கம் மட்டும் இன்னும் மிச்சம் இருந்தது. தெருவின் ஒரு மூலையில் உடைந்த கண்ணாடியும், உடைந்த விளக்குடனும் தேர் கேட்பாரற்று நின்றுகொண்டிருந்தது.
அந்த வழியே தனது எட்டு வயது மகனுடன் வந்த குயவன் ஒருவன், அங்கு நடந்த கலவரத்தைப் பற்றி அங்கிருந்தவர்களிடம் விசாரித்துக்கொண்டிருந்தான்.
அப்பொது அங்குமிங்கும் சுற்றி பார்த்துக்கொண்டிருந்த அந்த குயவனின் மகன், கீழே இருந்து ஒரு மரத்துண்டை எடுத்து அவன் தந்தையிடம் காட்டினான்.
அது கர்த்தருடைய சிலுவையின் உடைந்த பாகமாக இருக்கலாம்!, என்று அவன் தந்தை கூறியவுடன், அந்த மரத்துண்டை தூசித்தட்டி, தன் சொக்காயில் துடைத்து, தன் வீட்டிலுள்ள சாமியறைக்கு எடுத்துச்சென்றான், அந்த சிறுவன்.
அந்த உடைந்த மரத்துண்டு, அந்த சிறுவனின் பக்திக்கும், கடவுள் வழிபாட்டிற்கும் போதுமானதாக இருந்தது!
Posted by lovecoffeestories on July 21, 2011 in Prasanna Subramanian, Short Stories
தொண்டைமான்
ரகுனாத்.கே.தொண்டைமான்!
எத்தனை வசீகரமான இளைஞன். என் எழுபது வருட வாழ்க்கையில், எந்த ஒரு மனிதனைக் கண்டும் இத்தனை வியந்ததில்லை. எத்தனை அறிவு! எத்தனை ரசனை!
ரகுனாத், முதன் முதலில் என்னை ஒரு ‘வீடியோ கால்’ மூலம் தொடர்பு கொண்டான். நான் என் வாழ்நாளில் மேற்கொண்ட அத்தனை தொல்பொருள் ஆராய்ச்சிகள் பற்றியும் பேசி சிலாகித்தான். அவன் அகழாய்வியல் அறிவு என்னை பிரமிக்க வைத்தது.
27 வயதை தாண்டிறாத ஒரு இருபத்தியோராம் நூற்றாண்டு இளைஞன், புறநானூற்றை ஆராய்ந்து தொல்பொருள் ஆய்விற்கு விளக்கம் தருவதை என்னால் அத்தனை எளிதில் ஜீரணீக்க முடியவில்லை.
இப்போது அவனை பார்க்கத்தான் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மனிச் சத்திரத்திற்கு சென்றுகொண்டிருக்கிறேன். என் எழுபது வயதில், இதயக் கோளாறு, ரத்த அழத்தம், சக்கரைநோய் என் அனைத்தையும் சுமந்துகொண்டு நான் செல்வது, அந்த வசீகரனை சந்திப்பதற்காக மட்டுமல்ல!
என் வாழ்கையின் பாதியை செலவழித்தும், முடிக்கமுடியாமல் போன பல்லவர்களைப் பற்றிய ஆராய்ச்சிக்கான பதில் அவனிடம் உள்ளது!
இந்த ரகுநாத் லேசுபட்டவனல்ல! 15ஆம் நுற்றாண்டைச் சேர்ந்த அரந்தாங்கி தொண்டைமான்களின் நேரடி வம்சாவழியை சேர்ந்தவன்.
திருவாடுதுரை ஆதீனத்திற்கு வழங்கிய பதினாறு தாமிரத்தகடுகள் போக தன் பாட்டனார் அவனுக்கு விட்டுபோன மற்ற தகடுகளை வீடியோவில் பார்த்தபோதுதான், என் வியப்பு உச்சியை தொட்டது.
அதுமட்டுமின்றி, அம்மனிச்சத்திரத்தில் அவன் தோட்டத்திலேயே உள்ள ஒரு கோவிலின் கல்வெட்டில்தான் எனக்கான பொக்கிஷம் காத்திருப்பதாக அவன் சொன்னான்.
என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கப் போகும் பொக்கிஷம் அது!
அரந்தாங்கி தொண்டைமாங்கள் பல்லவர்களுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கட்டப்பட்டது இந்த கோவில்! அந்த கல்வெட்டில் பதிந்திருக்கும் வார்த்தைகளின் அர்த்தத்தை அவனுக்கு விளக்க, நான் அங்கு வரவேண்டும் என்று என்னை கேட்டுக்கொண்டான். இந்த பரஸ்பர தேவைதான் என் பயணத்தின் வேர்.
ஆனால் இத்தனை ஆச்சரியமானதொரு இளைஞன், என்னைதேடியே வந்திருப்பதை இன்றும் என்னால் நம்பமுடியவில்லை. கடவுள் என்று ஒருவன் உண்மையிலேயே இருக்கிறான் போல!
இதோ அவன் சொன்ன அம்மனிச்சத்திரத்தை அடைந்துவிட்டேன்.
அவன் கூறிய நாச்சியார் தோட்டத்து பங்களாவிற்கு செல்வதற்கான வழியை அந்த ஊர் மக்களிடம் விசாரித்தபோதுதான் அத்தனைபேர் முகத்திலும் ஒரு அதிர்ச்சியை பார்த்தேன்.
“அந்த பங்களாவா! அங்க எதுக்கையா போரீங்க? அது பாழடஞ்சில்ல கிடக்குது. அம்பது அறுபது வருசத்துக்கு முன்ன அந்த வீட்டுல இருந்தவங்க பாதிபேர் ஒருத்தன ஒருத்தன் அடிச்சுகிட்டு செத்துபோயிட்டாங்க. மிச்சமிருந்த கொஞ்சபேரும் அங்க இருக்க முடியாம வெளிநாட்டுக்கு போயிட்டாங்க. ஆனா இன்னமும் அங்க ஏதோ ஆவி நடமாட்டம் இருக்கிறதா ஒரு பேச்சு உண்டு. நீங்க எதுக்குங்க அங்கயெல்லாம போயிகிட்டு. ஊர்ல திருவிழா நடக்குது, இருந்து பாத்துட்டு உங்க ஊருபக்கமே போயிடுங்க!”
இதுபோன்ற கதைகளெல்லாம் எல்லா கிராமத்து பங்களாவிற்கும் பொதுவான ஒன்று. என் அகழ்வாராய்ச்சி வாழ்க்கையில் இதுபோல எத்தனை கேட்டிருக்கிறேன். அதனால் விடாப்பிடியாக அவர்களிடம் வழியைகேட்டுக்கொண்டு, அந்த ஒத்தயடிப் பாதையில் நடக்க ஆரம்பித்தேன்.
அந்த முற்காடுகளை பிளந்துகொண்டு சென்ற ஒத்தையடிப் பாதையில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் நாச்சியார் பங்களா உள்ளதாக ஊர் மக்கள் சொன்னார்கள். என் பொக்கிஷத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறேன்!
கொஞ்ச தூரம் சென்றபின் பனைமரக்காடுகளினூடே சென்றது அந்த பாதை.
அந்த காட்டில் ஏதோ ஒரு துற்நாற்றம் என் மூளையை திண்றது. கொஞ்சம் தொலைவில், பாதைக்கு வலதுபுறத்தில் நான் கண்ட காட்சி என்னை திகைக்கவைத்தது.
ஒரு பெண்ணின் உடலை சில பிணந்திண்ணிக் கழுகுகள் மேய்ந்துகொண்டிருந்தது. அந்த அழுகிய உடலின் பாகங்கள் அந்த காட்டில் அங்குமிங்குமாய் சிதறிக்கிடந்தது. முதன் முறையாக என் வாழ்நாளில் என்னை நடைதள்ளாட வைத்தது அந்த காட்சிகள்.
அந்த காட்சியை முடிந்தவரை புறக்கணித்து என் பாதையில் நான் முன்னேறினேன்.
அந்த பாதை மேலும் ஒரு சுடுகாட்டை கடந்து சென்றது. அந்த சுடுகாடு, தற்போதைய பயன்பாட்டில் இல்லை என்பது நன்றாக தெரிந்தது. மேலும், அதில் சில கல்லரகள் சிதைந்து அதன் உள்ளே உள்ள சமாச்சாரங்களை காட்டியது.
இந்த காட்சிகளால் நான் மனம் விடவில்லை. இதெல்லாம் தான் என் பொக்கிஷத்தை இத்தனை ஆண்டுகள் பாதுகாத்துவந்ததாகவே கருதிக்கொண்டேன்.
சில நூறு அடிகளில் ரகுநாத் கூறிய பங்களா என் கண்முன் விரிந்தது.
முற்கள் சூழ்ந்து, கட்டிடம் சிதைந்து, பங்களா கொஞ்சம் பாழடைந்துதான் இருந்தது. என் பிராயானத்தின் கலைப்பு கொஞ்சம் நிழல் கேட்டதால் நேரம் செலவிடாமல் உள்ளே சென்றேன்.
முகப்பில் பெரிய அறை, தூசியின் கூடாரமாக தென்பட்டது. சில வனவிழங்குகளின் தலைகள் புழுதியடைந்து சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்தது. சில ஓவியங்கள் தூசியினால் முழுவதுமாக மூடிக்கிடந்தது. ஆனால் ரகுநாத் இங்கு இருப்பதாகத்தானே சொல்லியிருந்தான்!
என் மனதில் கொஞ்சம் சந்தேகம் நிழலாடியது.
என் செல்போனை எடுத்துப் பார்த்தேன். துளியும் கூட ‘சிக்னல்’ இல்லை. பின் எப்படி இங்கிருந்து எனக்கு தொடர்பு கொண்டான். அதுவும் ‘வீடியோ கால்’!
என் சந்தேகம் மெல்ல மெல்ல பயமாக உருமாறியது.
அங்கிருந்த ஒவ்வொரு அறையாய் அவனை தேடினேன். அப்போதுதான் எனக்கு பொறிதட்டியது.
அவன் வீடியோகாலில் பேசிய மொழி – “ ….பங்களாக்கு பின்னால் ஒரு தோட்டம் இருக்கு. ஆங்கோர் கோவில் இருக்கு. அந்த கோவில் கல்வெட்டில்…..”
‘ஆங்கோர் கோவில்!‘ – இது சமீபத்திய மக்கள் பேசும் தமிழல்ல! அப்படியென்றால் அவன்…
என் சந்தேகத்திற்கு விடைகாணும் வேளையிலே, நான் அந்த பங்களாவின் மாடியிலுள்ள ஒரு அறைக்குள் நுழைந்துவிட்டேன்.
ஆச்சரியம். அந்த அறை, ஒரு துளி தூசிகூட இல்லாத சுத்தமான அறை. பளபளக்கும் ஆளுயரக்கண்ணாடி. அதன் முன் ஒரு ஜாடியில் தெளிந்த குடிநீர்!
எனக்கு தலை சுற்றியது. வினாடிப்பொழுதில் வேறு உலகத்திற்கு வந்ததைப்போல உணர்ந்தேன்.
அறையை சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்த எனக்கு அதிர்ச்சியின் உச்சக்கட்டமாவ் என் முன் தோன்றியது அந்த ஓவியம்.
ராஜவுடையில், கையில் வீரவாளுடன் ரகுநாத்!!
நான் வீடியோவில் பார்த்த அதே முகம்! அதே புருவம்! அதே கண்கள்! அதே சிரிப்பு!
அந்த ஓவியத்தின் கீழ் ‘ராஜா ரகுநாத தொண்டைமான்‘ என்று சிவப்பு மையில் எழுதியிருந்ததை படித்தவுடன் என் முதுகுத்தண்டில் சில்லென்று உணர்ந்தேன். என் இதயத்தில் ஐஸ் கத்தியால் குத்தியதைப் போல் இருந்தது அந்த சிரிப்பு.
என் காதுக்குள் ‘ஆங்கோர் கோவில்! ஆங்கோர் கோவில்!’ என்று சத்தமாக மீண்டும் மீண்டும் கேட்டது.
என் உடல் பதறியது.
மூச்சுவிட கடினமாக பட்டது.
என் நிலை தள்ளாடியது.
சட்டென்று என் வலது தோள்பட்டையில் ஒரு அழுத்தத்தை உணர்ந்தேன்! குனிந்து பார்த்தால் ஒரு ‘கை‘! ரத்தமற்று, பச்சை நரம்புகள் தெரிய வெளீரென்று ஒரு கை!
அவ்வளவுதான்! என் இதயம் இறுதியாக ஒரு முறை துடித்துக்கொண்டது.
“என்ன சார்? என் தாத்தா என்னைப் போலவே இல்லை? நான் அவரு மாதிரியே இருக்கிறதுனாலதான் எனக்கும் அவர் பேரையே வச்சுட்டாங்களாம்!” என்று அவன் கூறியது என் மூளையை எட்டும் போது என் இதயம் முழுவதுமாய் செயலிழந்துவிட்டது!
என் இறுதிச் சொட்டு உயிரும் தொண்டைமான்களுடன் சேர்ந்துகொண்டது!
Posted by lovecoffeestories on July 7, 2011 in Prasanna Subramanian, Short Stories
ஷெர்லாக் செயல்முறை!
Posted by lovecoffeestories on June 30, 2011 in Prasanna Subramanian, Short Stories