RSS

Category Archives: Short Stories

நீலக்கண்கள்

நீலக்கண்கள்


லோரன்ஸ் தனது வேலை நேரம் முடிந்த அடுத்த வினாடி தனது வீட்டினுள் அவசரமாக நுழைந்தான். நெஞ்சம் படபடக்க தனது தொப்பியை கலைந்து காய்ச்சலுற்றுக் கிடக்கும் தனது மகன் ஆல்பெர்ட்டை காண விரைந்தான்.


தன் காதலியின் மறைவிற்குப் பிறகு, அவள் லோரன்ஸிற்காக விட்டுச்சென்ற ஒரே உறவு – ஆல்பெர்ட்


தன் காதலி, ‘எமி’யின் மறைவிற்குப் பிறகு அடுத்தவினாடி வாழ காரணம் இல்லாமல் இருந்த லோரன்ஸிற்கு புதிய உலகமாய், புதிய உயிராய், புதிய வாழ்கையாய் கிடைத்தவன் ஆல்பெர்ட்.


ஆல்பெர்ட்டிற்கு வயது 7ஆகிறது. அவன் வளர வளர, அவன் உருவில் எமி அதிகம் தெரிந்தாள். எமியின் கடல் குடித்த நீலமான கண்களை அப்படியே பிரதியெடுத்து வைத்திருந்தான் ஆல்பெர்ட். அந்த நீலக்கண்கள் – லோரன்ஸிற்கு ஆயிரம் வருடம் வாழ்வதற்கான தெம்பையும், அர்த்தத்தையும் தந்தது.


ஆல்பெர்டிற்கு சிறு காய்ச்சல் வந்தாலும் நிலைகொள்ளாமல் பரிதவிப்பான் லோரன்ஸ். இன்று அவனுக்கு 105 டிகிரி காய்ச்சல். அதனால், இன்று முழுவதும் ஆல்பெர்ட்டுடன் இருந்துவிட முயற்சி செய்தான். இருந்தும் தலைமையின் கட்டாயத்தினால் அவன் விடுப்பு எடுக்கமுடியாமல், வேலையிலும் கவனம் செலுத்த இயலாமல் திண்டாடினான்.


அவன் சக ஊழியர்கள் கூட அடிக்கடி லோரன்ஸை இதற்காக கடிந்துகொள்வதுண்டு. “ஒரு குழந்தையின் மீது இத்தனை பாசம் வைப்பது என்றைக்குமே தவறு. எங்களுக்கும் குழந்தைகள் உண்டு. நாங்கள் உன்னைப் போலவா கவலைபட்டுக்கொள்கிறோம். நம்மைப் போன்ற ராணுவ வீரர்கள் இத்தனை இழகிய மனதுடன் இருப்பது பெரும் தவறு. உன் மனதை சற்று கடினமாக்கிக்கொள் லோரன்ஸ். அதுதான் எல்லோருக்கும் நல்லது.”


ஆனால் எத்தனை பேர் எத்தனை முறை சொன்னாலும் லோரன்ஸ் மாறுவதாக இல்லை. அவனது ஒரே உலகம் ஆல்பெர்ட் தான்.


காய்ச்சலால் உடல் வெளிரிப்போயிருந்த ஆல்பெர்ட்டை பார்த்தவுடன் லோரன்ஸ் அசைவில்லாமல், அந்த அறையின் நுழைவாயிலிலேயே நின்றுவிட்டான். அந்த சின்ன நீல விழிகளில் ஆல்பெர்ட் அவனை பார்த்ததில், தன்னையறியாமல் கண்கள் கலங்கிவிட்டான்.


அவனருகில் சென்று அவன் முடியைக் கோதி, அவன் நெற்றியில் முத்தமிடும் போது, அவன் இதழ்களில் உஷ்ணம் படர்ந்தது.


தனக்கு தெரிந்த அத்தனை மருத்துவத்தை செயல்முறை படுத்தியும் காய்ச்சல் குறையவில்லை.


ஆல்பெர்ட்டின் பார்வை தூரம் போகப்போக லோரன்ஸின் இதயம் கனமேறியது. இரவு நெருங்குகிறது.


இனியும் தாமதிக்காமல் தன் மகனை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முடிவெடுத்தான்.


‘எத்தனை தொலைவாய் இருந்தால் என்ன? எத்தனை குளிராய் இருந்தால் என்ன? என் மகனைவிட எதுவும் எனக்கு பெரிதல்ல’ என்று ஆல்பெர்ட்டை ஒரு போர்வையில் சுற்றி, தன் கையில் ஏந்தியபடி தெருக்களில் ஓடினான் லோரன்ஸ்.


ஊர் எல்லையில் இருந்த மருத்துவரின் வீட்டை நெருங்கும் போது மணி 9 ஆகிவிட்டது. ஆனால் சிறிதும் காத்திராமல், மருத்துவரை துரிதப்படுத்தி தன் மகனை காப்பாற்றிவிட்டான் லோரன்ஸ்.


மருத்துவர் கூட, “என்ன இது லோரன்ஸ். சாதாரன காய்ச்சலுக்கப் போய் இத்தனை ஆர்ப்பாட்டமா? யாரிடமாவது காரை கடன் வாங்கி வந்திருக்கலாமே. நீ கேட்டால் கொடுக்காமலா போவார்கள். இருந்தாலும் நீ உன் மகனிடம் கொண்ட பாசம் அதீதமானது. ஆபத்தாகக் கூட மாறலாம்.” என்று எச்சரித்து, ஆல்பெர்ட்டுக்கு தேவையான அத்தனை மருந்துகளையும் தந்து, தன் காரிலே லோரன்ஸை வீட்டிற்கு கொண்டு சேர்த்தார்.


அன்று இரவு முழுவதும் ஆல்பெர்ட்டை தன் மார்பிலேயே கிடத்தி, அவன் மீது கொண்ட பாசம், அவனது வருங்காலத்தை பற்றிய சிந்தனைகளிலேயே தூங்கிப்போனான் லோரன்ஸ்.


ஒரு குழந்தை தான் ஒருவனது வாழ்வில் எத்தனை அதிசயங்களை ஏற்படுத்திவிடுகிறது 




றுநாள் காலை, புத்துயிர் பெற்ற ஆல்பெர்ட்டின் உச்சியில் முத்தமிட்டு, அவனை பள்ளியின் வகுப்பறை வரை சென்று விட்டுவிட்டு மீண்டும் கலங்கிய கண்களுடன் தனது ராணுவதளத்திற்குச் சென்றான் லோரன்ஸ்.


தனது துப்பாக்கியை சரிபார்த்துக் கொண்டிருந்த லோரன்ஸ் ஒரு தனி அறைக்கு வரவழைக்கப்பட்டான்.


லோரன்ஸின் முன் சில குழந்தைகள் நின்றிருந்தார்கள்.


“என்ன பார்க்கிறாய் லோரன்ஸ்? இந்த யூத குழந்தைகளையெல்லாம் கொல்லும்படி ‘ஃப்யூரர்’ உத்தரவிட்டிருக்கிறார். ஃப்யூரரின் உத்தரவு…இம்..யோசிக்காமல் சுடு!”


நடுங்கிய கைகளுடன் தன் துப்பாக்கி எடுத்து குறிபார்த்த லோரன்ஸை, மூன்றாவது நின்றிருந்த யூத சிறுமியின் நீலக்கண்கள் சுட்டெரித்தது. 

—-xxx—-
 
1 Comment

Posted by on February 28, 2012 in Prasanna Subramanian, Short Stories

 

HEAVEN OR HELL ?

HEAVEN OR HELL ?

Am slightly doubtful as how far this will turn out to be a victorious concept, but rather confident that something will be perceived only if tried for and cannot predict the result even before attempting it. Henceforth, I have been set all the way to plunge into action, making myself ready for the electrifying trial.

It was like as though I opened my eyes in the midst of deep meditation or a nightmare, surrounded by darkness and utter chaos, without a small clue of where am I present exactly. Am completely worn out, aged and this seemed to have occurred in no time.

Not sure whether it is the land or air, dream or reality and also couldn’t make out whether am awake or asleep, in solitude or in crowd. Everything around created a brand new fresh feeling to sense! Unable to resist this weird experience, tried to get up and walk but with each step I took forward, things around moved front too. It took little time to realize that am going backward with every move made, which is contrary in nature.

Excitement along with wonder urged to know “Where the hell am I ?!?”

It wasn’t the hell actually but an intuition prompted me this is going to be better in one way and worse in another way! Slowly dim light rays emerged from above while am on the move still, creating partial gloomy and cloudy sensation enabling to see through fractionally.

Suddenly from nowhere thousands of people approached me from opposite direction, chanting my name and showering their wishes at me. The whole area appeared to be filled with ecstasy, happiness and all sort of exaltation of spirit inducing one to be overjoyed.

Thrill increased with the reason for celebration not known. I endured a state of bewilderment yet enjoyed to the core being the center of attraction for such a massive merrymaking.
Then I observed a strange recurring thing. In all the directions my eyes gazed, there were shining flickering hoardings bearing felicitation for the achievement I have done. This also made me exhilarated as it seemed to be visible only for me since none other took notice of it, adding to the obscure situation prevailing.
Bypassing the throng am set anew to undergo next odd state. Here I saw enormously large buildings that constituted a city like impression. The facade of all edifice are more or less similar with infinite storied structure making impossible to know about the exact number of floors. My marching continued till am awestruck with the exquisiteness of one particular apartment which also attracted me with a profound familiarity.
Automatically I tend to explore that apartment which had splendid interiors rather than its exterior work. Each and every room bore the resemblance of research related place and has got one lengthy peculiar name inscribed on a hanging nameplate put in front of it, marking an identity. One such name caused me to come to a stand still and it was none other than my own name.
The unraveling mystery continued. “What is my part in such a vague spot?”, question stimulated my sleeping mind to carve an answer for all the haphazard events occurring yet it rested again in vain since a conclusion could not be obtained.
Unable to resist this any further, entered and made a clear study of that room and also saw a random blurred visual in an enlarged screen in which I was seen working with a group of scientists showing series of images of Planets in varied angles, Satellites and telescopes of variety of shapes and structures and lot more theories and photos that remained connected to Solar system, Star system, Cosmos or Galaxy but didn’t get a clear concept. Shock waves ran down through my spinal since the visual was played in a reverse order from the end to the beginning.
Exhausted of the same intolerable events I forced myself to move out of the place immediately in order to have a breath of fresh air. Next step waited ahead right in front of me making me to realize the fact that am not entirely out of the prevailing disorientation.
The shimmering miraculous daze made me to ramble and came to a halt by falling to the ground. Strained myself to return back to normal, wherein the existing dim light faded away little by little and vanished once for all leaving behind me in loneliness again.
Once when regained consciousness I found myself sitting in a dark room. After tedious attempt finally am able to pinpoint the issue behind the incoherent happening. But the task said to be accomplished is not in any way a cakewalk.
Being a scientist it had been my sought after wish to bring about a change in the normal working principle of living. For this purpose tried a concept only after retrieving myself out of my memory and experimenting with a most often demanded concept by people. They wish, Life would have been best if it provides us with a rewind or fast forward option, unknowing of the deadly consequences its hiding within it.
Trapped by the same plot I tried for the same and now have landed in a turmoil. I have been undertaking a research to reinvent the universal rules to attain a complete solution for compensating the left of 3 days in February, 29 days occurring every 4 years else ending up with 28 days as the least.
The point to be noted is following the experimenting phase am now in a crucial situation to obtain a solution compulsorily which is damn sure to happen in future at any cost, as I have seen the after effects of it. The effects am yet to endure to bring it into real world concept will be horrible, dreadful, terrible or whatever worst it will be.
Be it a heaven or hell, I don’t care for it in a range of bit or byte and now I swear to pack up my research forever and move for dinner now!

!!!—!!!
 
1 Comment

Posted by on February 28, 2012 in Karthika Rajendran, Short Stories

 

மதிப்பு

மதிப்பு
திரு. மாதவன் ராவ்இரண்டு கோடியே நாற்பது லட்சம். மேலும் ஏலம் கேட்பவர்கள் கேட்கலாம்!””
மூன்று முறை மணி ஒலிப்பியபின் அந்த ஓவியத்தின் ஏலம் முடிவுக்கு வந்தது.மாதவன் ராவின் செக்ரட்டரி நிருபமா, தன் பையில் இருந்த காசோலையை பூர்த்தி செய்யத்தொடங்கினாள்.
“உங்க பாஸ் ரொம்ப லக்கி மேடம். ஓவியர் செழியனோட பெயிண்டிங் கிடைக்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கனும்.””
“உண்மையாகத்தான். இந்த பெயிண்ட்டிங், எங்க பாஸ் பல நாள் ஆசைபட்ட ஒன்னு. அதனால் தான் அவர் தினமும் இங்கு வந்து அந்த பெயிண்டிங்கை பல மணிநேரம் பார்த்துக்கொண்டிருந்தார். லகில் இருக்கும் அத்தனை இம்ப்ரெஸனிஸ்டோட பெயிண்டிங்கையும் சேகரிக்கறதுதான் எங்க பாஸோட மிகப் பெரிய லட்சியம். அதுக்கு அவர் எத்தனை கோடியையும் செலவு செய்வார்.”
“மேடம். ஒரு சின்ன வேண்டுகோள்.””
“சொல்லுங்க”
“ஓவியர் செழியனுக்கு எங்க சபா சார்பில் ஒரு விழா எடுக்கிறதா முடிவு செய்திருக்கோம். அது வைரக்கும்  இந்த பெயிண்டிங்  இங்கு  இருந்தால் நல்லா  இருக்கும். கொஞ்சம் தயவு பண்ணி….”
“என்னால எதுவும் இப்போ சொல்ல முடியாது சார். இதில் எங்க பாஸ்தான் முடிவு சொல்லனும். நான் எதற்கும் உங்களுக்காக பேசி பார்கிறேன்.””
“நல்லது மேடம்.”
காசோலையை சபா செக்ரட்டரியிடம் கொடுத்துவிட்டு, பெயிண்டிங்கிற்கான உரிம்மப்பத்திரங்களை பெற்றுக்கொண்டு  விடைபெற்றாள் நிருபமா.
மறுநாள்.
“ஹலோ! எம்.எஃப்.எஸ் சபா?”
“ஆமாம். நீங்க?”
மறுமுனையில் தொடர்ந்தாள் நிருபமா. “நான் மிஸ்டர்.மாதவன் ராவோட செக்ரெட்டரி பேசறேன்.””
“சொல்லுங்க மேடம். ங்க போன் காலைத்தான் எதிர்பார்த்து இருந்தோம். சார் என்ன சொன்னாருங்க?”
“சார் சம்மதிச்சுட்டார். னால், எந்த டேட் வரை பெயிண்டிங் உங்களுக்குத்  தேவைபடும்னு தெரியனும்!”
“வருகிற 27ஆம் தேதி மாலை விழா வச்சிருக்கோம்மறுநாள் காலையே நீங்க எடுத்துகலாம்.””
“சரி. னால் பெயிண்டிங்க்கு எந்த பாதிப்பும் வராமல் இருக்கனும். ங்க பாஸ் அந்த பெயிண்டிங்கை அவர் உயிரைவிட மேலாக பார்கிறார். அதனால், பெயிண்டிங்க்கு ஒரு சிறு பாதிப்பு வந்தால் கூட, உங்க சபா பெரிய விலைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்””
“பெயிண்டிங் எங்கள் பொறுப்பு மேடம்.   ஓவியத்தோட மதிப்பு தெரிஞ்சவங்க நாங்க. அதனால் முழு பாதுகாப்போட இருக்கும்.””
“நல்லது.””
“மேலும் ஒரு சின்ன  வேண்டுகோள் மேடம். விழாவிற்கு மாதவன் சாரும் வந்தா நல்லா இருக்கும்.  ஓவியத்தோட உரிமையாளர் என்பதைத் தாண்டி, இம்ப்ரெஸனிசத்தை உண்மையா ரசிக்கிற  ரசிகர். அதனால் அவர் வந்தால், இந்த விழா இன்னும் சிறப்பா இருக்கும்னு சபா சார்பா கேட்டுகறோம்.””
“”ஒரு நிமிடம். நான் பாஸிடம் கேட்டுட்டு சொல்றேன்””
சிறிது நேரம் கழித்து..” “மன்னிக்கவும், பாஸ்   27ஆம் தேதி ஒரு முக்கியமானதொழில்சங்க சந்திப்பில் கலந்துகொள்ளவேண்டி உள்ளது.  அதனால் அவர் வரமுடியாது. இருந்தாலும், பாஸ் சார்பில், ஒரு பாராட்டு கடிதம் உங்களை வந்து சேரும் என தெரிவிக்கச்சென்னார்.””
27ஆம் தேதி மாலை விழா நிறைவு கட்டத்தை எட்டியிருந்தது.
ஓவியத்தின் முன் சிறிய மேடை அமைத்து, கலைத்துறை அமைச்சர், சபா   நிர்வாகிகள் மத்தியில் செழியன் அமர்ந்திருந்தார். செழியனின்  கனிவான முகத்தில், மெளிதாக கோபம் தலைகாட்டியிருந்ததை யாரும் கவனிக்க தவறவில்லை.
“உலகில் பிசாரோ போல், மோனே போல், சிஸ்லி போல் இம்ப்ரெஸனிசத்தில் நம் நாட்டிலும் ஒரு உலகத்தர கலைஞன் இருப்பது நம் எல்லோருக்கும் பெருமை.. நன்றி  திரு.செழியன் அவர்களே. கடந்த ஐம்பது நாட்கள் தங்களது ஓவியத்தை எங்கள் சபாவில் கொண்டதற்காகவும், தங்களது   வருகையினாலும்  நாங்கள்  மிகவும் பெருமை அடைகிறோம். மீண்டும் ங்களுக்கு….””
முடிவுரையை முழுவதும் கேட்காமலும் கூட செழியன் மேடையைவிட்டு வெளியேறினார். அவர் முகத்தில் இருந்த கோபம் விஸ்வரூபம் எடுத்திருந்தது. னால் காரணம் தான் ஒருவருக்கும் புரியவில்லை.
விரைவாக அவரை பின் தொடர்ந்து அவர் காரினுள் ஏறும் போது காரணத்தை பணிவுடன் வினவினார் சபா செக்ரெட்டரி.
செழியன் இறுதியாக வாய்திறந்து, “யோவ். ஐம்பது நாளா என்னத்தையா கிழிச்சீங்க? ஒருத்தனுக்கு கூடவா என் பெயிண்டிங் தலைகீழா மாட்டியிருந்தது தெரியலை?”.”
செக்ரெட்டரியின் மன்னிப்பிற்கு காத்திராமல் செழியனின் கார், தெரு எல்லையை சென்று மறைந்தது.
முற்றும்
 
3 Comments

Posted by on February 18, 2012 in Prasanna Subramanian, Short Stories

 

ORU KUTTY KATHAI!

ஒரு குட்டி கதை! 

முன்னொரு காலத்தில், மடையூர் என்கிற கிராமத்தில் பிரம்மானந்த சாஸ்த்ரி என்னும் குருக்கள் ஒருவர் வாழ்ந்து வந்தார். 

மடையூர் மக்கள் அனைவரும் அவரை தெய்வத்திற்கு இணையாக மதித்து வணங்கினர். ஊரில் எந்த ஒரு முடிவு எடுக்கப் பட்டாலும், அது பிரம்மானந்த சாஸ்திரிகள் அருள் கூறிய பிறகே நடக்கும். இத்தனைக்கும் காரணம், சரஸ்வதி தேவியே சாஸ்திரிகளுக்கு நேரடியாக காட்சியளித்து அருள் பாவித்ததுதான். 
அன்று முதல், பிரம்மானந்த சாஸ்த்ரிகள் மடையூரின் கண்கண்ட தெய்வமாக பூஜிக்கப்பட்டார். 

ஆனால், பிரம்மானந்த சாஸ்திரிகளுக்கு ஒரு பெரும் கவலை இருந்தது. அது அவரது மகன் வித்யாதரனைப் பற்றியது. சாஸ்திரிகள் தனது மகனை தன்னைப் போன்றே ஒரு தெய்வீகவாதியாக ஆக்கிவிட வேண்டும் என நினைத்தார். ஆனால், வித்யாதரனோ, தன் தந்தையின் கனவை அதிகம் பொருட்படுத்தாமல், சுய வியாபாரம் செய்து முன்னேர வேண்டும் என்று நினைத்தான். 

ஆனால், தகுந்த அறிவின்மையின் காரணமாகவும், ஆற்றலிண்மையின் விளைவாகம், அவனால் எந்த வியாபாரத்திலும் வெற்றியடைய முடியவில்லை. 

வெகுநாட்கள் இதை சலித்துக்கொண்டிருந்த சாஸ்த்ரிகள், ஒரு நாள் பொறுமையிழந்து தனது மகனை காசிக்கு வேதங்கற்க அனுப்பிவைத்தார். 

பல வருடங்கள் காசியில் தங்கி வேதங்கள் கற்றவனாய் ஊர் திருப்பினான் வித்யாதரன். அதன் பிறகு தனது மகனின் ஞானத்தையும் பக்தியையும் ஊரிற்கு பறைசாற்றும் விதமாக, தன் மகனை, தன்னைப் போலவே சரஸ்வதி தேவியின் அருள் பெற தவம் புரியச்செய்தார் சாஸ்த்ரிகள். 

தன் தந்தையின் கட்டளையை ஏற்று, நீண்ட காலம் கடும் தவம் புரிந்தான் வித்யாதரன். இறுதியில், தேவியின் அருள் பெற வித்யாதரன் ஒரு பெரும் யாகம் நடத்தவேண்டியதாக இருந்தது. சாஸ்த்ரிகள் யாகத்திற்கு தேவயான அனைத்தையும் உடனிருந்து நடத்தினார். அந்த யாகம் பல நாட்கள் நீடித்தது. ஊர் மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக இந்த செய்தி தெரியப்பட, அந்த ஊர் மக்கள் அனைவரும், வித்யாதரனின் யாகத்தை நேரில் பார்க்க பெரும்திரலாக வந்தனர். 

பதினாறு நாட்கள் அந்த யாகம் நீடித்திருந்த நிலையில், பெரிய தீச்சுவாலையின் முன்பு அமர்ந்து, யாகம் மேற்கொண்டிருந்த வித்யாதரன், சோர்வுற்றவனாய், தன் தந்தையிடம், 

“இல்லை தந்தையே. நான் கற்ற அனைத்து வேதங்களையும், நான் பயின்ற அனைத்து மந்திரங்களையும் பிரயோகித்து பார்த்துவிட்டேன். சரஸ்வதி தேவி எனக்கு காட்சியளிக்கவில்லை. எனக்கு போதிய ஞானம் இல்லை என்று நினைக்கிறேன். இத்துடன் யாகத்தை முடித்துக்கொள்வது தான் முறை.” என்றான். 

பிரம்மானந்த சாஸ்த்ரிகள் அவனை கடும் சினத்துடன் பார்த்து, “முட்டாளே, எதிரில் இருக்கும் தீயில் சரஸ்வதி தெரிகிறாள் என்று உரக்க கூறி, இரு கைகளையும் உயர்த்தி கும்பிடு. மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்.” என்றார்.

அட!”    அன்று, அந்த நொடியில் வித்யாதரன் ஞானம் பெற்றான்! 


பின்பு, தன் தந்தையைப் போலவே சரஸ்வதி தேவியின் அருள் பெற்ற வித்யாதர சாஸ்த்ரிகள், பல வருட காலம் மடையூர் மக்களுக்கு ஆசி கூறிவந்தார். 


— முற்றும்—
 
 

Thoothan

தூ-த-ன் 

ன் ஞாபகங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கா?” கீத்தன் சொன்னதை அதிர்ச்சியின் உச்சத்திலிருந்த என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஆனால் அது உண்மை தான். எனக்கு தெரிந்து, எனக்கு ஞாபகம் இருக்கும் முதல் நாளே, நான் என் உடலெள்ளாம் ரத்தமாக… 

அந்த முதல் நாள்.. 

எனக்கு அந்த சித்திரவதைகளெல்லாம் பழகிப்போய் இருந்திருக்கவேண்டும். காரணம், எனக்கு அது அதிக வலியையோ, அதிக ஆச்சரியத்தையோ கொடுக்கவில்லை. எல்லாம் எதிர்பார்த்தவொன்றாகவே இருந்தது. 

தினம் தினம் ஒரு சித்திரவதை. என் உடம்பும் அதற்கு தயாராக இருந்தது. தயார் செய்யப்பட்டிருந்தது என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். 

என் உடலில், என் மனதில் ஒரு புது உணர்ச்சியை உருவாக்கியது அவளின் பார்வைதான். 

கீத்தன்! எட்டடி உயரத்தில், வெழுத்த தேகத்தில், பச்சை விழிகளோடு அவள் என்னை பார்க்கும் பார்வை. ஆயிரம் ஈட்டிகளை என் நெஞ்சில் வீசியது. 

இத்தனை சவுக்கடிகளும் எனக்கு தராத துயரத்தை, அவள் என்னை பார்க்காத நிமிடங்கள் எனக்கு தந்தது. 

கீத்தன், என்னை மேற்பார்வை செய்ய நியமிக்கப்பட்டவள். யாரால்? தெரியாது! தெரிந்துகொள்ளும் அவசியமும் எனக்கு ஏற்படவில்லை. எனக்கு அப்போது புரிந்ததெல்லாம், நான் இந்த உலகிற்கு புதியவன். இவள் எனக்கு புதியவள். ஆனால் இவள் எனக்கு உரியவள். 

எத்தனையோ விதவிதமான உருவங்கள் என்னைச் சுற்றித் திரிந்தாலும், இவள் மட்டும் தான் என் கவனத்தை ஈர்த்தாள். இவள் மட்டும்தான் என் மொழி பேசினாள். 

நாட்கள் செல்லச் செல்ல எங்களுக்கு அதிக தனிமை கிடைத்தது. அவளுடன் நான் பழகும் நேரங்களுக்காக நான் ஏங்கினேன். மெல்ல அவளும் என்னிடம் மயங்கினாள். கீத்தன் – என் கீத்தன் ஆனாள். 

நாங்கள் அதிக நேரம் ஒன்றாக கழித்தோம். 
வார்த்தைகள் இல்லாத மொழியில் பேசிக்கொண்டோம். 
நாங்கள் ஒன்றானோம்! 

அந்த புணர்ச்சியின் முடிவில் அவள் கூறிய வார்த்தைகள் தான், “உங்களிடம் நான் ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும்.” 

“இதை நான் சொல்வது வெளியில் தெரிந்தால், என் தலை வெட்டப்படும். பரவாயில்லை. இதற்கு மேலும் என்னால் மறைக்கமுடியாது. என் உயிரைவிட நம் காதல் எனக்கு மேலானது.” கீத்தன் 

நான் புரியாமல் விழிக்க., 

“ஆம்! நீங்கள் வேற்று கிரகத்தில் இருந்து கடத்தப் பட்டவர். உங்களுக்கு ஞாபகம் இருக்காது. காரணம், உங்கள் நினைவுகளை இவர்கள் பறிமுதல் செய்திருப்பார்கள்.” 

இது தான் என் அத்தனை அதிர்ச்சிக்கும் காரணம். இத்தனை நாள் இறந்தகாலம், எதிர்காலம் என எதுவும் இல்லாமல் கிடந்த எனக்கு, இவள் செய்தி மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. 

“இவர்கள்?” 

கீத்தன்,“இந்த பால்வீதியின் கூட்டமைப்புத் தலைவர்கள்! சுற்றியுள்ள அத்தனை கிரகங்களையும் அடிமைகளாக்குவதில் எங்கள் நெபுலா கூட்டணியிற்கும், கேனிஸ் கூட்டணிக்கும் பெரும் போட்டி நடக்கிறது. அதன் முதல் கட்டம் தான் இந்த ஆள் கடத்தல்.” 

எனக்கு என் உயிரின் இயற்கை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவிற்கு வந்தாலும், இப்போதுதான் ‘அடுத்து என்ன நடக்கப்போகிறது’ என்ற பயம் எழுகிறது. 

“ஒவ்வொரு கிரகத்திலிருக்கும் உயிர்களும், அந்த கிரகத்தில்,ஒரு தலைமை உயிரின் கீழ் செயல்பட வேண்டும். அந்த தலைமை உயிர், எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். இது தான் இவர்களின் திட்டம். உங்களைப் போலவே ஜீவராசிகள் இருக்கும் அத்தனை கிரகத்திலிருந்தும் உயர் ரக உயிர்களை கடத்திவருவார்கள். அவர்களுக்கு அவர்களின் கிரகத்தில் இருக்கும் மற்ற உயிர்களை ஆழும்விதமாக பயிர்ச்சிகளும் அளிக்கப் படும்.” 

அவள் பேசிக்கொண்டு இருக்கும் போதே, அவள் கைகளில் ஏதோ தீபோல் பளிச்சிட, “எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. நான் உடனே செல்ல வேண்டும்.” என்று கூறி நொடிப் பொழுதில் மறைந்துவிட்டாள். 



நான் இன்று கேட்டவை, என் மனதை அதிகம் வாட்டியது. என்னுடைய ஞாபகங்களை மெல்ல மெல்ல என் ஆழ்மனதிலிருந்து வெளிப்பட வைத்தது. 

அன்றிரவு, நான் கண்கள் மூடிய வேளையில், நான் ஒரு சிறுவனாக பச்சை புல்வெளியில் சுற்றித்திரிந்த காட்சி என் கனவில் விரிந்தது. வண்ணவண்ண பூக்கள். அழகிய நதி. ஆனால், என்னைச் சுற்றியிருந்த ஆடுகளெல்லாம் திடீரென்று பயந்தோட, விண்ணிலிருந்து பெரும் இரைச்சலுடன் என் முன் தரையிறங்கியது ஒரு…… 

என் கனவு முடியும்முன் நான் தட்டி எழுப்பப்பட்டேன். இன்றும் அதே சித்திரவதைகளுக்காக என்னை அழைத்துச் செல்கிறார்கள். எனக்கு விழிகளெல்லாம் ‘எங்கே என் கீத்தன்?’. 

மூச்சுக்காற்று தடை செய்யப்பட்ட ஒரு கண்ணாடி பெட்டியில் என்னை அடைத்து வைத்திருக்கும், இன்றைய நாளுக்கான என் இறுதிச் சித்திரவதை முடியும் நேரத்தில் என் கீத்தன் அந்த இடத்தில் தோன்றினாள். 

அவள் பார்வையில் இன்று உயிர் இல்லை. முகமெல்லாம் மேலும் வெழுத்து, உடல் இழைத்திருந்தாள். 

பணியாட்களை அனுப்பிவிட்டு என் அருகே வந்து என் நெற்றியில் அவள் உதட்டை பதித்துக்கொண்டாள். நான் சிரித்தேன். 

அவள் அழுதாள். 

என்ன ஆச்சு கீத்தன்?” 

“நாம் பிரியப்போகும் நாள் நெருங்கிவிட்டது. நீ கடைசி கட்ட பயிற்சிக்கு தயாராகிவிட்டாய். அதைக் கூறத்தான் என்னை நேற்று அழைத்திருந்தார்கள்” 

“எனக்கு புரியவில்லை. இந்த பயிற்சி முடிந்த பின்பு என்னை எங்கே அழைத்துச்செல்வார்கள்?


 “பூமிக்கு! அதுதான் உன் கிரகம். அங்கே உனக்காக அத்தனையும் தயார் நிலையில் உள்ளது!” 

“உன்னை நான் கண்டிப்பாக பிரியவேண்டுமா?” 

“ஆம்! ஆனால் கவலைப்படாதே. நீ அதிக நாள் பூமியில் இருக்க வேண்டியதில்லை. இது ஒரு முதற்கட்ட பரிசோதனைதான். அதனால் குறிப்பிட்ட சில கடமைகளை நீ முடித்த பிறகு, மீண்டும் இங்கு அழைத்துவரப்படுவாய். நான் காத்திருப்பேன்” 

அவள் மீண்டும் என் நெற்றியில் உதடுபதிக்க, புதிதாக சிலர் வந்து என்னை கடைசிகட்ட பயிற்சிக்காக அழைத்துச் செல்ல அவளிடம் அனுமதி வாங்கினார்கள். 

கண்ணில் நீர்பெருக அவர்களுடன் நான் செல்லும் வேளையில் என்னையே பார்த்தவாரு நின்றிருந்தாள் என் கீத்தன். 

மனதை திடப்படுத்திக் கொண்டு என் இறுதி பயிற்சியை முடித்து, பூமியில் என் கடமையை நிறைவேற்றி விரைவில் என் கீத்தனுடம் இணைய ஆயத்தமானேன். 

‘என் இறுதிப் பயிற்சி எங்கே? என் இறுதிச் சித்திரவதை என்ன?’ 

அவர்கள் என்னை ஒரு மலை உச்சிக்கு அழைத்துச் சென்றனர். 


அங்கே எனக்காக ஒரு சிலுவை நின்றிருந்தது. 


—முற்றும்—

 
 

ரசனை

ரசனை 

மெட்ராஸ் ஆர்ட் மியூசியத்தின் வாசலில் மஹதியை இறக்கிவிட்டு, தனது பைக்கில் நின்றவாறே சோம்பல் முறித்தான் ஆதித்யா.

“நீ உள்ளே வரலை?”, மஹதி

“உள்ளே சொக்கா போடாதா பொண்ணுகளோட பெயிண்டிங்ஸ் இருக்குமா?” அசடு வழிய கேட்டான் ஆதித்யா.

“ஒழிஞ்சு போ!”  பொய்யான கோபத்துடன் மியூசியத்துள் நுழைந்தாள் மஹதி.

ந்த உலகம், இந்த ஆதித்யா, இந்த காதல் என அனைத்தையும் மறந்து, மஹதி அந்த ஓவியத்தில் லயித்திருந்தாள்.

‘கடவுள், மனிதனை படைத்ததற்கான உச்சக்கட்ட காரணம் – இந்த ஓவியம்’ 
அந்த மியூசியத்தில் பார்வையிட வந்த ஒவ்வொருவரும் நகர்ந்து கொண்டே செல்ல, கடந்த மூன்று மணி நேரமாக ஒரே ஓவியத்தில் தன் மனதை இழந்த மஹதி, உணர்ச்சியின் வெளிப்பாடாக, கண்ணில் நீர் ததும்ப “எத்தனை அழகு!” என்றாள்.
“இது வெறும் நகல் தான். உண்மையான ஓவியத்தை நீ பார்த்ததுண்டா?” என்றது மஹதிக்கு பின்னால் இருந்து ஒரு குரல். 
அவள் திடுக்கிட்டு பின்னால் திரும்பி பார்க்க, ஒரு மனிதர் ‘டீ-ஷர்ட் ஷாட்’ஸுடன் புன்னகைத்தார். மனிதருக்கு அறுபது வயது இருக்கும். இல்லை இல்லை, ஒரு ஐம்பது?, நாற்பது? சரியாக சொல்லமுடியவில்லை. 
மஹதி அவரை புரியாமல் விழிக்க, “இந்த ஓவியத்தோட ஒரிஜினல் காப்பி பார்த்திருக்கிறாயா?” என் மறுபடி வினவினார். 
இல்லையென்று தலையசைத்த மஹதியின் அருகில் வந்து, “நான் பார்த்திருக்கிறேன். நியூ யார்க் ஆர்ட் மியூசியத்தில். இட் வாஸ் ரியலி அமேசிங். வான்காவோட ஒவ்வொரு ஸ்ட்ரோக்கும் அப்பட்டமா தெரியும்.” என்று கண்ணாடி கண்களில் அந்த நகல் ஓவியத்தை மேலும் ஒருமுறை வருடினார். 
“ஆனால் என்னுடைய ஃபேவரைட், வான்காவோட ‘கஃபே டெரேஸ்’தான். அதை பார்பதற்காகவே நெதர்லாந்து போயிருந்தேன். அதனுடைய ஒரு காப்பிகூட இங்க இருக்கு. பார்த்திருக்கியா?” 
மீன்டும் இல்லையென்று தலையசைத்த மஹதியின் கைகளை பற்றி அவளை அடுத்த அறைக்கு இழுத்துச் செல்லும்போது மஹதி செய்வதறியாது திகைத்திருந்தாள். 
எந்த ஒரு சக இளைஞன் கூட தன்னிடம் இத்தனை உரிமை எடுத்துக்கொண்டதில்லை. தன்னைவிட வயதில் பல மடங்கு மூத்த ஒரு மனிதர், தன் கைகளைப் பற்றி, இத்தனை உரிமையுடன் இழுத்துச் செல்வது மஹதிக்கு ஆச்சரியமாக இருந்தது. 
மஹதி, அந்த மனிதரிடம் இறுதியாக வாய்திறந்து பேசுவதற்குள் அவர்கள் அந்த புதிய ஓவியத்தின் முன் நின்றிருந்தனர். 
“லுக் அட் திஸ் பெய்ண்டிங், யங் லேடி! இம்ப்ரெஸனிஸத்தோட உச்சக்கட்டம். கீழே இருக்கும் தரையில், வெளிச்சத்தின் பிரதிபளிப்பை பார். இந்த மனிதர்களைப் பார். இந்த மாதிரி ஓவியங்களை அங்குளம் அங்குளமாக ரசிக்கனும். அப்பதான புரியும்! ” 
தன் ஓவியப் பேராசிரியர் கூட ஒரு ஓவியத்தை இத்தனை ரசிப்பாரா என்று மஹதி வியந்தாள். இவர் கண்களில் எத்தனை வியப்பு! அவளுக்கு இந்த புது மனிதரை பிடிக்கத்தொடங்கிவிட்டது. 
மாலை நான்கு மணிக்கு, அந்த மியூசியத்தின் வாசலில், மஹதி “சார், எனக்கு ஆச்சரிமா இருக்கு. உங்களுக்கு எப்படி பெயிண்டிங்ஸ் மேல இத்தனை ஈர்ப்பு? நம்ம ஊர்ல இப்படி ஒரு ஆளா?” 
“எனக்கும் ஆச்சர்யம் தான். கடைசியா எனக்கு இந்த ஓவியங்களை பத்தி மனசுவிட்டு பேச ஒரு ஆளு கிடச்சதுக்கு. அதுவும் ஒரு அழகான பெண்!” 
மஹதி சின்ன புன்னகையுடன் அவரிடமிருந்து விடைபெறும் வேளையில், “சார், அடுத்து உங்களை எப்போ பார்க்கலாம்?”
“நாளை மாலை! சாந்திபவனில்! ‘ஃபிலிம் ஃபெஸ்டிவளில்’!” என்றார் பத்மநாபன் என்று இப்போது பெயர் தெரிந்துவிட்ட அந்த மனிதர். 
றுநாள் இரவு, படம் பார்த்துவிட்டு எல்லோரும் வீடு திரும்பும் நேரத்தில்,

“போன வருஷம், இங்க ஒரு ஷார்ட் ஃபிலிம் பார்தேன். ‘தி எனிமி’ன்னு. இன்னும் மனசுக்குள்ளயே நிக்குது. படத்தோட கேமரா மேனை கட்டிபிடிச்சு வாழ்த்தலாம் போல இருந்தது” 

இந்தியாபோன்றொரு நாட்டில் தன்னைத்தவிற எவருக்கும் கலைகளின் மீதும், காவியங்களின் மீதும் ரசனையில்லை என்று அவள் நினைத்திருந்தது எத்தனை தவறு என்று மஹதிக்கு புரிந்தது.

நாட்கள் செல்லச் செல்ல பத்மநாபனின் கலையார்வமும், ரசனையும் மஹதியை அதிகம் ஈர்த்துவிட்டது, இறுதியாக தன் ரசனைகளுக்கு ஏற்ப ஒரு சக ஜீவனை இந்த பூமியில் கண்டுபிடித்துவிட்டதாய் மஹதி உணர்ந்தாள். இந்த முதியவரின் நட்பு அவளுக்கு பரவசத்தை ஏற்படுத்தியது.

தினமும் மஹதி பத்மநாபனை சந்தித்தாள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலை பற்றி விவாதித்தார்கள். ஒரு நாள் ஹம்மிங் பறவை, மற்றொரு நாள் ‘ஹிட்லர் – ஈவா பிரான்’ என உலகின் அத்தனை விஷயங்களையும் பற்றி பேசி சிலாகித்தாற்கள்.

பத்மநாபனை பார்க்காத நேரங்களை நொந்துகொண்டாள்.

ஒரே மாதிரியான ரசனை. ஒரு பெண் எதிர் பார்க்கும் மென்மை, பக்குவம், என தனக்கு இந்த உலகத்தில் ஏற்ற துணை இவர்தானோ என நினைத்தாள். கொஞ்சம் கொஞ்சமாக மஹதி பத்மநாபன் மேல் காதல் கொண்டாள்.

தன் தந்தையை விட வயது மூத்தவராக இருப்பாரோ? இருந்தும் வயது ஒரு பொருட்டில்லை என்று தனனைத்தானே சமாதானமும் செய்துகொண்டாள்.

ரு நாள், இத்தாலிய உணவகத்தில் ‘பாஸ்தா’வின் வரலாற்றை பற்றி பத்மநாபன் கூறுவதை ரசித்து கேட்டுக்கொண்டிருந்தாள். 


தன் காதலை அவரிடம் சொல்ல சரியான தருணத்தை தேடிக்கொண்டிருந்த நேரத்தில் மஹதியின் செல்போன் சினுங்கியது . 


பலமுறை அழைப்பை துண்டித்தும், மீண்டும் மீண்டும் கத்தியது அந்த செல்போன். இறுதியாக பேசினாள். 


“ஆதித்யா, நான் இங்கு முக்கியமான வேலையாக இருக்கிறேன்! தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாதே.” 


“ஆனால் நான் உன்னிடம் ஒரு வாரமாக பேச முயற்சி செய்கிறேன். என்ன ஆச்சு உனக்கு. என்னை மறந்துட்டாயா?” 


“நான் உன்னிடம் பேசும் சூழ்நிலையில் இல்லை”


“என்னை மறந்துட்டாயா? இல்லை பிடிக்கலையா?” 


எதிரில் அமர்ந்த பத்மநாபன் தன்னை உற்று கவணிப்பதை உணர்ந்த மஹதி, மேற்கொண்டு எதுவும் பேசாமல் செல்போனை ‘ஆஃப்’ செய்துவிட்டு, “என் நண்பன். பணம் கடனா கேட்டு தொல்லை செய்கிறான்.” 


பத்மநாபன் புன்னகைத்தார்.
தே நாள் இரவு. பத்மநாபன் தன் அறையில், கையில் விஸ்கியுடன் அமர்ந்திருந்தார். 
“இதுக்குபோய் கவலை படலாமா. நான் அப்பவே சொன்னேன். இந்த மாதிரி பொண்ணுகளை எல்லாம் நம்பமுடியாதுன்னு. இப்பயாவது உனக்கு புரிஞ்சதே! அதுவுமில்லாமல், இந்த பெயிண்டிங், ஃபோட்டோகிராபி, குச்சுப்புடின்னு சுத்தற பொண்ணெல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஒத்துவராது. நம்ம ஜட்ஜ் ரவிசங்கருக்கு ஒரு பொண்ணு இருக்காள், ஸ்ருதின்னு. நல்ல அழகு, நிறைய பணம். நம்ம குடும்பத்துக்கு தகுந்த பொண்ணு. நாளைக்கு போய் அவளை மீட்பண்ணு. சரியா?”

தன் தந்தையின் வார்த்தைகளை அமைதியாக ஏற்றுக்கொண்டான் ஆதித்யா.

முற்றும்

 
1 Comment

Posted by on September 23, 2011 in Prasanna Subramanian, Short Stories

 

அப்பா

அப்பா 

னக்கு எப்போதுமே என் அப்பாவை பிடிக்கும் தான். ஆனால் அதை வெளிபடுத்துவதற்கான நேரம் தான் கடைசி வரை அமையாமல் போய்விட்டது.

இன்னும் சொல்லப்போனால் அவர் மறைந்த பின் தான் அவரை நான் எவ்வளவு நேசித்தேன் என்பது எனக்கே தெரிந்தது. அதுவும் பிரசவத்துக்காக என் மனைவியை அவள் அம்மா வீட்டிற்கு அனுப்பிவிட்டு தனிமையில் தவிக்கும் இந்நாட்களில் தான் என் அப்பாவின் நினைவுகள் என்னை அதிகம் சூழ்கின்றது.

சராசரியான தந்தை – மகன் உறவு எங்களுக்குள் அமையவில்லை. காரணம்?

நான் சராசரியான மகன் தான். ஆனால் என் அப்பா சராசரியான தந்தை இல்லை.

ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட வயது வரைதான் அறிவை தேடி போகவேண்டும். அதன் பிறகு அவனுக்கான சமுதாய பொறுப்புகள் அவனுக்கு வந்து விடும். ஆனால் என் அப்பாவின் அறிவுத்தேடலே என் அப்பாவை என்னிடம் இருந்து, இந்த உலகத்திலிருந்தே பிரித்து விட்டது. அதுவும் அத்தனை வித்தியாசமான தேடல்!

அவர் கேட்டது – ‘மரணத்திற்குப் பின் என்ன?’  ‘மனிதன் இறந்த பிறகு மீண்டும் உயிர்த்தெழ முடியுமா?’  ‘மறுஜென்மம் உண்டா?’.

இந்த கேள்விகளை புத்தகம் அளவிலே அவர் நிறுத்தியிருந்தால் அவர் நன்றாக இருந்திருப்பார். ஆனால் அவர் உண்மையை தேடி பல எல்லைகளை தாண்டிச் சென்றுவிட்டார்.

ஊரில் எங்கு இறங்கல் செய்தி வந்தாலும், கேமிராவையும் சவுண்டு ரெகார்டரையும் எடுத்திக்கொண்டு சென்றுவிடுவார்.

ஊருக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அவரின் பெயர் கெட்டது. சில நாட்களிலேயே ஊர் அவருக்கு பைத்தியக்காரன் பட்டம் கட்டிவிட்டது. ஆனால் அப்போதும் அவர் தன்னை நிறுத்திக்கொள்ளவில்லை.

ஒரு நாள் நள்ளிரவில் அவரை வீட்டில் காணாமல் தேடி, இறுதியில் சுடுகாட்டில் கண்டபோது தான் எனக்கே கொஞ்சம் பயம் வந்தது. இந்த அகோரமான தேடலை உடனடியாக நிறுத்திக்கொள்ளும்படி நான் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை.

ஒரு நாள் எங்களுக்குள் சண்டை வழுத்தது. அதன் காரணமாக நான் என் மனைவியுடன் வீட்டை விட்டு வெளியேறினேன். அங்கு நின்றது தான எங்கள் உறவும்.

அப்பா மறைந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்ட நிலையில் அவரின் நினைவுகள் நாளுக்கு நாள் அதிகம் ஆகிக்கொண்டே போனது. கனவுகளும் கூட அவர் அவருடை அறையிலிருந்து அழைப்பதைப்போல் அடிக்கடி வந்தது. இறுதியாக ஒரு நாள் அவரின் பூட்டிய அறையை திறந்தேன்.

தூசி அடர்ந்திருந்த அறையில் எங்கு பார்த்தாலும் புத்தகங்கள் தான். அத்தனையிலும் ஏதோ ஒரு விதத்தில் மரணம் இருந்தது. அவருடைய மேசைமேல் மஞ்சள், நீலம், ரத்தச்சிவப்பு என பல நிறங்களில் காய்ந்த ரசாயனங்களும் கண்ணாடிக் கோப்பகளும்.

என் அப்பா ஒருமுறை என்னிடம் கேட்டார். ‘நம்மை விட அறிவியலிலும் கலாச்சாரத்திலும் பல ஆண்டுகளுக்கு முன்னமே முன்னேறிய பண்டைய எகிப்தில் ஏன் இறந்த பிணங்களை பதப்படுத்தி பாதுகாத்தனர்?’

சரியான பதில் தெரியவில்லையென்றாலும் அது மூடநம்பிக்கைகளின் உச்சக் கட்டமென்றே புரிந்தது.

அவர் அலமாரியிலிருந்த புத்தகங்களின் சில அட்டைப்டங்கள் என்னை ஈர்த்தது. நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் ஒவ்வொரு புத்தகமாக படித்தேன். அத்தனையும் பிதற்றல்கள். சாட்சியங்கள் ஏதும் இல்லாத புலம்பல்கள்.

பல புத்தகங்களில் விஞ்ஞானம் கலந்த விக்கிரமாதித்தன் கதைகள். இந்த கதைகளெல்லாம் என் அப்பாவை எப்படி இத்தனைதூரம் கவர்ந்திருக்க முடியும் என்று வியந்துகொண்டேன்.

நாளாக நாளாக அந்த புத்தகங்கள் மூலம் என் அப்பா என்னுடன் உறையாடுவதுபோல் உணர்ந்தேன். முட்டாள்தனம் என்று நினைத்தாலும், அந்த புத்தகங்களில் ஏதோ ஒரு வகையில் ஈர்க்கப்பட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக, அந்த புத்தகங்கள் மூலம், மரணத்தில் ஒரு வசீகரம் இருப்பதாய் உணர்ந்தேன். என் அப்பா என்னிடம் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கத் தொடங்கியது.

அந்த புத்தகங்கள் அனைத்தும் கூறியது, ‘மறைந்த உயிர்கள் இந்த உலகத்தில் மீண்டும் உயிர்க்கும்’ என்பதுதான். ஆனால் ஒரு புத்தகத்தில் உள்ள ஒரு குறிப்பு என்னை அதிகம் கவர்ந்தது.

அது கூறியது, ‘பண்டைய சீன அரசாட்சியான ‘ஹன்’ அரச காலத்தின் மன்னன் ஒருவன் தன் லட்சியத்தை அடையும் முன் தனக்கு முதுமை வந்துவிட்டது என்று சில மூலிகைகளை அரைத்துக் குடித்துவிட்டு இறந்துவிட்டான். பின் அவன் தன் மரணத்தறுவாயில் கூறியது போலவே அதே உடல் அம்சங்களுடன் மீண்டும் பிறந்து அந்த இலட்சியத்தை நிறைவேற்றினான்’ என்றும் இருந்தது.

இதில் எனக்கு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், அவன் இறந்து கிடந்த நிலை.

கண்கள் இரண்டும் சிவந்து , நாசிதுவாரங்களில் வெண்மை படிந்து, நாக்கு மற்றும் கால் நகங்கள் நீலமாய், என அப்படியே என் அப்பாவின் மரண நிலை!!

எனக்கு நடந்தது புரிந்ததுவிட்டது. உடல் வியர்த்தது. என் அப்பா எத்தனை பெரிய காரியத்தை செய்திருக்கிறார்.

இது உண்மையா?

உண்மையாக இருந்தால்?

நினைக்கும் போதே எனக்கு நெஞ்சு படபடத்தது. என் அப்பாவும் மீண்டும் உயிர்த்தெழுவாரா? அந்த புத்தகக் குறிப்பின் அடியில் என் அப்பா கைபட எழுதிய ஒரு வாசகம் என்னை மேலும் நிலைகுழையச் செய்தது.

‘இதை நீ படிப்பாய் என்று எனக்கு தெரியும். அதனால் தான் நான் இந்த முடிவை எடுக்கிறேன். ஆனால் இதில் உன் உதவி எனக்கு தேவை. நான் என் உடலைப் பிரிவது குரு பௌர்ணமியில். அதிலிருந்து சரியாக பதினாலாவது பௌர்ணமியின் போது எனது உடலை தோண்டி எடுத்து , எனது மண்டை ஓட்டை மட்டும் சரியாக இரவு 1.25 மணிக்கு உடைத்து விட வேண்டும். இது உன் தந்தையாக நான் கேட்கும் ஒரே வேண்டுகோள். மறந்துவிடாதே!’ 

என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நடுங்கிய கைகளுடன் கேலண்டரை எடுத்துப் பார்தேன். ஆச்சிரியம் மீது ஆச்சரியம்! அப்பா குறிப்பிட்ட பதினாலாவது பௌர்ணமி நாளை மறுநாள்.

என் அப்பாவின் நினைவுகளும், அவர் தோன்றிய கனவும், நான் அவர் அறையை திறந்ததும், அவர் புத்தகங்களை படித்ததும், அவர் எழுதிய குறிப்பை சரியான நேரத்தில் படித்ததையும் இயல்பாக, எதேர்ச்சியாக நடந்த நிகழ்வாக என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை.

இத்தனை நாட்கள் என் அப்பா என்னுடன் தொடர்புகொண்டிருந்தாரா?

இதை இதற்கு மேலும் லேசாக விட்டுவிடக் கூடாது.

எனக்கு என் அப்பா வேண்டும். எப்படியேனும் வேண்டும்.

அந்த புத்தகத்தில் இருந்த அத்தனை குறிப்புகளையும் சேகரித்தேன். அவர் குறிப்பிட்டிருந்த அந்த இரவும் வந்தது.

பெளர்ணமி நிலவு உச்சி வானை அடையும் வரை காத்திருந்து பின் என் அப்பாவின் கல்லறையை தோண்ட ஆரம்பித்தேன். அந்த இரவில் நிலவு வெளிச்சத்தில் கல்லறைகள் அனைத்தும் வெள்ளி முலாம் பூசியது போல் இருந்தது. அத்தனை குளிரிலும், என் உடலை வேர்வை நனைத்தது. மனதிற்குள் அப்பா அப்பா என்று சொல்லிக்கொண்டே தோண்டினேன்.

அந்த அழுகிய நாற்றத்தை கூட நான் பொருட்படுத்தாது தோண்டி முடித்தேன். இறுதியில் என் அப்பாவின் மண்டை ஓட்டினை வெளியே எடுத்து சரியாக 1.25 மணியாகும் வரை காத்திருந்தேன்.

இரவை உணரவில்லை. அதன் குளிரை உணரவில்லை. இந்த உலகம் எதுவும் உணராமல் ஒரு கையில் சுத்தியலுடன் என் அப்பாவின் மண்டை ஓட்டை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தேன். சரியாக 1.25 மணியாக இன்னும் இருபது வினாடிகள்தான் இருந்தது.

உள்ளங்கையில் இடைவிடாமல் வியர்த்தது. மணி சரியாக 1.25ஐ அடிக்க என் சுத்தியல் என் அப்பாவின் மண்டை ஓட்டை தகர்த்தது.

வேலை முடிந்ததும் அங்கிருந்து விரைந்து, வீட்டுக்கு வந்து போர்வைக்குள் ஒளிந்துகொண்டேன். நான் செய்த செயலின் தாக்கம் இன்னும் என் மனதை விட்டு துளியும் விலகவில்லை.

என் அப்பா என்னை தேடி வரப்போகிறாரா?‘ என் அறையில் மாட்டியிருந்த அவரது ஃபோட்டோவில் அவர் என்னைப் பார்த்து சிரித்தார்.

எனக்கு இதயம் கனமாக தெரிந்தது. பல நாள் தண்ணீர் அருந்தாததைப் போல் தாகம் எடுத்தது. தண்ணீர் குடிக்க நான் அடுத்த அறைக்குச் செல்லும் போது டெலிபோன் அலறியது. சில வினாடிகள் என் இதயம் முழுவதுமாக செயலிழந்து விட்டது.

யார் ஃபோன் செய்வது? அப்பாவா?

நடுங்கிய கையில் ரிசீவரை எடுத்த எனக்கு வாயிலிருந்து வார்த்தை வெளிவரவில்லை.

மறுமுனையிலிருந்து, “ஹலோ, ஜீவா தம்பியா? நான் லட்சுமி பேசறேனுங்க” என்று என் வேலைக்காரியின் குரல் கேட்டது.

இப்போதும் என்னால் வார்த்தைகளை வெளியிடமுடியவில்லை.

லட்சுமி, “தம்பி, நம்ம அம்மாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருச்சுங்க. மூக்குமுழியெல்லாம் அப்படியே நம்ம அய்யாவ உரிச்சு வச்சிருக்குங்க” என்றாள்.

முதல் முறை என் இதழ்களிலிருந்து உடைந்த வார்த்தை,

“அப்பா”


 
 

தங்கச்சிலுவை !

தங்கச்சிலுவை !

காய்ந்த ரத்தம், கால்களைத் தொலைத்த செருப்புகள், விட்டுப்போன வெட்டருவாள் வேல்கம்பு என்று அந்த தெரு, முந்தைய இரவு நடந்த கலவரத்திற்கு ஆதாரங்களை சேர்த்துவைத்திருந்தது.

ஒரு மாதம் முன்பு, அந்தோனியார் ஆலயத்தில், அப்போதிருந்த தேக்குமரச் சிலுவைக்கு பதிலாக வரும் தேர் திருவிழாவில் தங்கச் சிலுவை ஒன்றை செய்து, அதை ஊர்வளத்தில் கொண்டுசெல்லலாம் என முடிவெடுக்கப்பட்டு, அதற்காக பணவசூலில் ஈடுபட மெத்தப்பட்டி ஊர் தலைவன் ஃபெர்னாண்டசிடம் பொறுப்பை ஒப்படைத்தார் ஃபாதர் அருள்துரை.

அப்போதிருந்தே மெத்தப்பட்டி ஊர் மக்களுக்கும், கீழத்தெரு மக்களுக்கும் வாக்குவாதம் ஆரம்பித்தது.

தேக்குமரச் சிலுவை போதும் என்றனர் கீழத்தெரு வாசிகள்.

அதெப்படி? மற்ற மதங்களைப்போல் நமது திருவிழாக்களையும் விமர்சையாக கொண்டாவேண்டாமா? நம் கடவுளின் பெருமையை இந்த ஊரறிய செய்யவேண்டாமா என்று கீழத்தெரு மக்களின் வாயடைத்தனர் மெத்தப்பட்டி வாசிகள்.

ஒரு வழியாக அப்போது சமாதானமாகி, கீழத்தெரு மக்களும் தங்கச் சிலுவைக்கான பணவசூலிற்கு பங்களித்தனர்.

தங்களுடை சுயதேவைகளை பொருட்படுத்தாது, உழைக்கும் பத்தையெல்லாம் ஃபெர்னாண்டசிற்கு அளித்தனர். 

வரப்போகும் தங்கச்சிலுவையால் தங்கள் ஊருக்கும், ஊரின் ஆலயத்திற்கும் கிடைக்கப்போகும் பேரையும் புகழையும் எண்ணி,எப்போதும் இல்லாத வண்ணம், அவர்கள் தேர் திருவிழாவையும், தங்கச்சிலுவையையும் எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால் தேர் திருவிழாவில் தங்கச் சிலுவைக்குப் பதிலாக பழைய தேக்குமரச் சிலுவையை பார்த்ததும், கீழத்தெரு மக்களுக்கு கோபம் தலைக்கேறி, என்னதான் ஃபாதரும் ஃபெர்னாண்டசும் கிடைத்த பணம் போதவில்லையென்று காரணம் சொன்னாலும், அதையேற்காமல், வாக்குவாதத்தில் இறங்கி, கைகலப்பு ஏற்பட்டு, இறுதியில் ஏழு பேர் உயிரிழந்து, ஐம்பத்து ஆறு பேர் படுகாயம் ஆகும் வரை தொடர்ந்தது அந்த கலவரம்.

இப்போது அந்த தெருவில் அதிக மக்கள் நடமாட்டம் இல்லை. ஊரில் பாதி பேர் மருத்துவமனையிலும், மீதி பேர் காவல்நிலையத்திலும் உள்ளனர்.

நேற்று இரவு கலவரத்தின் தாக்கம் மட்டும் இன்னும் மிச்சம் இருந்தது. தெருவின் ஒரு மூலையில் உடைந்த கண்ணாடியும், உடைந்த விளக்குடனும் தேர் கேட்பாரற்று நின்றுகொண்டிருந்தது.

அந்த வழியே தனது எட்டு வயது மகனுடன் வந்த குயவன் ஒருவன், அங்கு நடந்த கலவரத்தைப் பற்றி அங்கிருந்தவர்களிடம் விசாரித்துக்கொண்டிருந்தான்.

அப்பொது அங்குமிங்கும் சுற்றி பார்த்துக்கொண்டிருந்த அந்த குயவனின் மகன், கீழே இருந்து ஒரு மரத்துண்டை எடுத்து அவன் தந்தையிடம் காட்டினான்.

அது கர்த்தருடைய சிலுவையின் உடைந்த பாகமாக இருக்கலாம்!, என்று அவன் தந்தை கூறியவுடன், அந்த மரத்துண்டை தூசித்தட்டி, தன் சொக்காயில் துடைத்து, தன் வீட்டிலுள்ள சாமியறைக்கு எடுத்துச்சென்றான், அந்த சிறுவன்.



அந்த உடைந்த மரத்துண்டு, அந்த சிறுவனின் பக்திக்கும், கடவுள் வழிபாட்டிற்கும் போதுமானதாக இருந்தது!


—-x—-

 

தொண்டைமான்

தொண்டைமான்



குனாத்.கே.தொண்டைமான்!

எத்தனை வசீகரமான இளைஞன். என் எழுபது வருட வாழ்க்கையில், எந்த ஒரு மனிதனைக் கண்டும் இத்தனை வியந்ததில்லை. எத்தனை அறிவு! எத்தனை ரசனை!

ரகுனாத், முதன் முதலில் என்னை ஒரு ‘வீடியோ கால்’ மூலம் தொடர்பு கொண்டான். நான் என் வாழ்நாளில் மேற்கொண்ட அத்தனை தொல்பொருள் ஆராய்ச்சிகள் பற்றியும் பேசி சிலாகித்தான். அவன் அகழாய்வியல் அறிவு என்னை பிரமிக்க வைத்தது.

27 வயதை தாண்டிறாத ஒரு இருபத்தியோராம் நூற்றாண்டு இளைஞன், புறநானூற்றை ஆராய்ந்து தொல்பொருள் ஆய்விற்கு விளக்கம் தருவதை என்னால் அத்தனை எளிதில் ஜீரணீக்க முடியவில்லை.

இப்போது அவனை பார்க்கத்தான் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மனிச் சத்திரத்திற்கு சென்றுகொண்டிருக்கிறேன். என் எழுபது வயதில், இதயக் கோளாறு, ரத்த அழத்தம், சக்கரைநோய் என் அனைத்தையும் சுமந்துகொண்டு நான் செல்வது, அந்த வசீகரனை சந்திப்பதற்காக மட்டுமல்ல!

என் வாழ்கையின் பாதியை செலவழித்தும், முடிக்கமுடியாமல் போன பல்லவர்களைப் பற்றிய ஆராய்ச்சிக்கான பதில் அவனிடம் உள்ளது!

இந்த ரகுநாத் லேசுபட்டவனல்ல! 15ஆம் நுற்றாண்டைச் சேர்ந்த அரந்தாங்கி தொண்டைமான்களின் நேரடி வம்சாவழியை சேர்ந்தவன்.

திருவாடுதுரை ஆதீனத்திற்கு வழங்கிய பதினாறு தாமிரத்தகடுகள் போக தன் பாட்டனார் அவனுக்கு விட்டுபோன மற்ற தகடுகளை வீடியோவில் பார்த்தபோதுதான், என் வியப்பு உச்சியை தொட்டது.

அதுமட்டுமின்றி, அம்மனிச்சத்திரத்தில் அவன் தோட்டத்திலேயே உள்ள ஒரு கோவிலின் கல்வெட்டில்தான் எனக்கான பொக்கிஷம் காத்திருப்பதாக அவன் சொன்னான்.

என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கப் போகும் பொக்கிஷம் அது!

அரந்தாங்கி தொண்டைமாங்கள் பல்லவர்களுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கட்டப்பட்டது இந்த கோவில்! அந்த கல்வெட்டில் பதிந்திருக்கும் வார்த்தைகளின் அர்த்தத்தை அவனுக்கு விளக்க, நான் அங்கு வரவேண்டும் என்று என்னை கேட்டுக்கொண்டான். இந்த பரஸ்பர தேவைதான் என் பயணத்தின் வேர்.

ஆனால் இத்தனை ஆச்சரியமானதொரு இளைஞன், என்னைதேடியே வந்திருப்பதை இன்றும் என்னால் நம்பமுடியவில்லை. கடவுள் என்று ஒருவன் உண்மையிலேயே இருக்கிறான் போல!

தோ அவன் சொன்ன அம்மனிச்சத்திரத்தை அடைந்துவிட்டேன்.

அவன் கூறிய நாச்சியார் தோட்டத்து பங்களாவிற்கு செல்வதற்கான வழியை அந்த ஊர் மக்களிடம் விசாரித்தபோதுதான் அத்தனைபேர் முகத்திலும் ஒரு அதிர்ச்சியை பார்த்தேன்.

“அந்த பங்களாவா! அங்க எதுக்கையா போரீங்க? அது பாழடஞ்சில்ல கிடக்குது. அம்பது அறுபது வருசத்துக்கு முன்ன அந்த வீட்டுல இருந்தவங்க பாதிபேர் ஒருத்தன ஒருத்தன் அடிச்சுகிட்டு செத்துபோயிட்டாங்க. மிச்சமிருந்த கொஞ்சபேரும் அங்க இருக்க முடியாம வெளிநாட்டுக்கு போயிட்டாங்க. ஆனா இன்னமும் அங்க ஏதோ ஆவி நடமாட்டம் இருக்கிறதா ஒரு பேச்சு உண்டு. நீங்க எதுக்குங்க அங்கயெல்லாம போயிகிட்டு. ஊர்ல திருவிழா நடக்குது, இருந்து பாத்துட்டு உங்க ஊருபக்கமே போயிடுங்க!”

இதுபோன்ற கதைகளெல்லாம் எல்லா கிராமத்து பங்களாவிற்கும் பொதுவான ஒன்று. என் அகழ்வாராய்ச்சி வாழ்க்கையில் இதுபோல எத்தனை கேட்டிருக்கிறேன். அதனால் விடாப்பிடியாக அவர்களிடம் வழியைகேட்டுக்கொண்டு, அந்த ஒத்தயடிப் பாதையில் நடக்க ஆரம்பித்தேன்.

அந்த முற்காடுகளை பிளந்துகொண்டு சென்ற ஒத்தையடிப் பாதையில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் நாச்சியார் பங்களா உள்ளதாக ஊர் மக்கள் சொன்னார்கள். என் பொக்கிஷத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறேன்!

கொஞ்ச தூரம் சென்றபின் பனைமரக்காடுகளினூடே சென்றது அந்த பாதை.

அந்த காட்டில் ஏதோ ஒரு துற்நாற்றம் என் மூளையை திண்றது. கொஞ்சம் தொலைவில், பாதைக்கு வலதுபுறத்தில் நான் கண்ட காட்சி என்னை திகைக்கவைத்தது.

ஒரு பெண்ணின் உடலை சில பிணந்திண்ணிக் கழுகுகள் மேய்ந்துகொண்டிருந்தது. அந்த அழுகிய உடலின் பாகங்கள் அந்த காட்டில் அங்குமிங்குமாய் சிதறிக்கிடந்தது. முதன் முறையாக என் வாழ்நாளில் என்னை நடைதள்ளாட வைத்தது அந்த காட்சிகள்.

அந்த காட்சியை முடிந்தவரை புறக்கணித்து என் பாதையில் நான் முன்னேறினேன்.

அந்த பாதை மேலும் ஒரு சுடுகாட்டை கடந்து சென்றது. அந்த சுடுகாடு, தற்போதைய பயன்பாட்டில் இல்லை என்பது நன்றாக தெரிந்தது. மேலும், அதில் சில கல்லரகள் சிதைந்து அதன் உள்ளே உள்ள சமாச்சாரங்களை காட்டியது.

இந்த காட்சிகளால் நான் மனம் விடவில்லை. இதெல்லாம் தான் என் பொக்கிஷத்தை இத்தனை ஆண்டுகள் பாதுகாத்துவந்ததாகவே கருதிக்கொண்டேன்.

சில நூறு அடிகளில் ரகுநாத் கூறிய பங்களா என் கண்முன் விரிந்தது.

முற்கள் சூழ்ந்து, கட்டிடம் சிதைந்து, பங்களா கொஞ்சம் பாழடைந்துதான் இருந்தது. என் பிராயானத்தின் கலைப்பு கொஞ்சம் நிழல் கேட்டதால் நேரம் செலவிடாமல் உள்ளே சென்றேன்.

முகப்பில் பெரிய அறை, தூசியின் கூடாரமாக தென்பட்டது. சில வனவிழங்குகளின் தலைகள் புழுதியடைந்து சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்தது. சில ஓவியங்கள் தூசியினால் முழுவதுமாக மூடிக்கிடந்தது. ஆனால் ரகுநாத் இங்கு இருப்பதாகத்தானே சொல்லியிருந்தான்!

என் மனதில் கொஞ்சம் சந்தேகம் நிழலாடியது.

என் செல்போனை எடுத்துப் பார்த்தேன். துளியும் கூட ‘சிக்னல்’ இல்லை. பின் எப்படி இங்கிருந்து எனக்கு தொடர்பு கொண்டான். அதுவும் ‘வீடியோ கால்’!

என் சந்தேகம் மெல்ல மெல்ல பயமாக உருமாறியது.

அங்கிருந்த ஒவ்வொரு அறையாய் அவனை தேடினேன். அப்போதுதான் எனக்கு பொறிதட்டியது.

அவன் வீடியோகாலில் பேசிய மொழி – “ ….பங்களாக்கு பின்னால் ஒரு தோட்டம் இருக்கு. ஆங்கோர் கோவில் இருக்கு. அந்த கோவில் கல்வெட்டில்…..”

ஆங்கோர் கோவில்!‘ – இது சமீபத்திய மக்கள் பேசும் தமிழல்ல! அப்படியென்றால் அவன்…

என் சந்தேகத்திற்கு விடைகாணும் வேளையிலே, நான் அந்த பங்களாவின் மாடியிலுள்ள ஒரு அறைக்குள் நுழைந்துவிட்டேன்.

ஆச்சரியம். அந்த அறை, ஒரு துளி தூசிகூட இல்லாத சுத்தமான அறை. பளபளக்கும் ஆளுயரக்கண்ணாடி. அதன் முன் ஒரு ஜாடியில் தெளிந்த குடிநீர்!

எனக்கு தலை சுற்றியது. வினாடிப்பொழுதில் வேறு உலகத்திற்கு வந்ததைப்போல உணர்ந்தேன்.

அறையை சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்த எனக்கு அதிர்ச்சியின் உச்சக்கட்டமாவ் என் முன் தோன்றியது அந்த ஓவியம்.

ராஜவுடையில், கையில் வீரவாளுடன் ரகுநாத்!!

நான் வீடியோவில் பார்த்த அதே முகம்! அதே புருவம்! அதே கண்கள்! அதே சிரிப்பு!

அந்த ஓவியத்தின் கீழ் ‘ராஜா ரகுநாத தொண்டைமான்‘ என்று சிவப்பு மையில் எழுதியிருந்ததை படித்தவுடன் என் முதுகுத்தண்டில் சில்லென்று உணர்ந்தேன். என் இதயத்தில் ஐஸ் கத்தியால் குத்தியதைப் போல் இருந்தது அந்த சிரிப்பு.

என் காதுக்குள் ‘ஆங்கோர் கோவில்! ஆங்கோர் கோவில்!’ என்று சத்தமாக மீண்டும் மீண்டும் கேட்டது.

என் உடல் பதறியது.

மூச்சுவிட கடினமாக பட்டது.

என் நிலை தள்ளாடியது.

சட்டென்று என் வலது தோள்பட்டையில் ஒரு அழுத்தத்தை உணர்ந்தேன்! குனிந்து பார்த்தால் ஒரு ‘கை‘! ரத்தமற்று, பச்சை நரம்புகள் தெரிய வெளீரென்று ஒரு கை!

அவ்வளவுதான்! என் இதயம் இறுதியாக ஒரு முறை துடித்துக்கொண்டது.

என்ன சார்? என் தாத்தா என்னைப் போலவே இல்லை? நான் அவரு மாதிரியே இருக்கிறதுனாலதான் எனக்கும் அவர் பேரையே வச்சுட்டாங்களாம்!” என்று அவன் கூறியது என் மூளையை எட்டும் போது என் இதயம் முழுவதுமாய் செயலிழந்துவிட்டது!

என் இறுதிச் சொட்டு உயிரும் தொண்டைமான்களுடன் சேர்ந்துகொண்டது!

முற்றும்.




 

ஷெர்லாக் செயல்முறை!

ஷெர்லாக் செயல்முறை!

ந்த நாலுபேரில் ஒருவன் தான் இதை செய்திருக்க முடியும். யார் அவன்? 
நான் எத்தனை பெரிய அறிவாளி! செஸ்ஸில் உலக ஜாம்பவான்களையெல்லாம் திக்குமுக்காட வைத்திருக்கிறேன். என் யுக்திகளை பயன்படுத்தி எத்தனை கம்பெனிகள் இன்று உச்சத்தை எட்டியிருக்கிறார்கள். அப்படிபட்ட என்னிடம் இவர்கள் இதை செய்திருக்கக்கூடாது. இதோ பிடித்துவிடுகிறேன். 
அவனைப் பிடிக்க ஒரு சிறு குறிப்பை தயார் செய்துகொள்கிறேன். 
1) திருடுபோன பொருள் – என்னுடைய ரோலக்ஸ் வாட்ச் 
2) இடம் – என் படுக்கையறை 
3) நேரம் – புதன் காலை 11 மணி 
4) சந்தேகத்துக்குறிய நபர்கள் – வாட்ச்மேன் (அ) தோட்டக்காரன் (அ) கார் டிரைவர் (அ) சமயல்காரன். 
முதலில் ஏதேனும் தடயம் கிடைக்கிறதா என்று பார்ப்போம். இதை அவ்வளவு எளிதில் விட்டுவிடக்கூடாது. நான் யார் என்பதை இவர்களுக்கு தெரியப்படுத்தும் நாள் இது. 
தடயம்? 
என் படுக்கையறையில் ஏதேனும் கலைந்துள்ளதா? ஏதேனும் கிரீஸ் கறை? செம்மண்? புதினா இலை? 
இல்லை. எந்த தடயமும் இல்லை. மிகவும் கச்சிதமாக காரியத்தை முடித்திருக்கிறார்கள் போல!
புதன் காலை பதினோருமணிக்கு யார் என் அறைக்குள் வந்திருக்க முடியும்? அதுவும் நான் குளித்துக்கொண்டிருந்த நேரம். 
சமையல்காரன் தேநீர் கொண்டுவரும் நேரம்! வாட்ச்மேன் ஏதேனும் தகவல் சொல்ல வந்திருக்கலாம்! டிரைவர், நான் அழைத்தாலன்றி என் அறைக்குள் வருவது இல்லை. தோட்டக்காரன் என் அறையை சுத்தம் செய்வது வழக்கம்! 
இல்லை. இந்த யூகங்கள் எல்லாம் ஒத்துவராது!   
இதற்கு ஒரே வழி, ‘அழைத்துவாருங்கள் என் சீஸரை!’ 
நான் எனது வேட்டைக்காகவே பிரத்யேகமாக வளர்த்துவரும் நாய். முன்னூரு அடி தொலைவில், புதருக்குள் இரை கிடந்தாலும். மோப்பசக்தியால் எளிதில் கண்டுபிடித்துவிடும் ஜெர்மன் ஷெப்பர்டு, என் சீஸர். 
சீஸரை என் அறைக்குள் அனுமதித்தேன். 
ஆனால் சீஸர், நான் நேற்று மிச்சம்வைத்த ‘ஷிவாஸ் ரீக’லை சுத்தம் செய்துவிட்டு, போதையில் தட்டுத்தடுமாறி சமையல்காரனிடம் சென்று ஒரு எலும்புத்துண்டை பெற்றுக்கொண்டு தன் கூட்டினுள் சென்று மறைந்துவிட்டது.
‘யூ டூ சீஸர்?’ 
இருக்கட்டும்! இன்னும் ஒரு முறை. என் மொத்த அறிவையும் பயன்படுத்தும் தருணமாக, இன்னும் ஒரேவொரு முறை. 
என் அறையை தலைகீழாக புரட்டிப்போட்டு, அங்குளம் அங்குளமாக துழாவியபோது அது கிடைத்துவிட்டது. அலமாரியின் காலில் சிக்கியிருந்த அந்த ஒரு முடி. 
நீட்டமாக, ரெண்டு அங்குளத்தில் ஒற்றை முடி. (என்னுடையது கொஞ்சம் சுருட்டை) 
இந்த ஒரு முடி போதும். டி.என்.ஏ பரிசோதனையில் திருடன் அழகாக மாட்டிக்கொள்வான். 
ரியாக ஒருவாரம் காத்திருந்தபின் டி.என்.ஏ முடிவுகள் கிடைத்தது. 
ஆனால், மீண்டும் வருத்தம். அது அந்த நால்வரில் எவருடைய முடியும் இல்லை. 
(பின் அந்த முடி யாருடையது? என் படுக்கையறைக்குள் வேறு எந்த மனிதன் வந்தது? ஒரு வேளை அந்த குட்டை பாவாடை, ‘பாய் கட்’ ஸ்டெஃபியின் முடியா?… இருக்கலாம்!) 
என் அத்தனை அறிவும் இந்த விஷயத்தில் உபயோகமில்லாமல் போய்விட்டது. 
இப்போது என்ன செய்வது? எப்படியேனும் எனக்கு என் ரோலக்ஸ் வேண்டும். காவல்துறையை விட்டால் இப்போது வேறு வழியில்லை. 
இரண்டு நாள் கழித்து ‘எஸ்.ஐ’ அனுப்பியதாக ஒரு கான்ஸ்டபில் வீட்டுக்கு வந்தார். 
‘டி.ஐ.ஜி’ என் நண்பர். அவர் வரவில்லையென்றாலும் குறைந்தபட்சம் ஒரு ‘எஸ்.ஐ’யாவது அனுப்பியிருக்கவேண்டும், என்று நொந்துகொண்டேன். 
கான்ஸ்டபில் தன் கடமைக்கு என் அறையை சுற்றிப்பார்த்தார். என் அறையின் ‘எல்.ஈ.டி’யின் விலையை விசாரித்துக்கொண்டார். இறுதியாக, 
“நீங்க யாரு யாருமேல சந்தேகப்படுரீங்க சார்” என்று என்னையே விசாரித்தார். 
நான் அந்த நால்வரை அவருக்கு அறிமுகப்படுத்தினேன். 
நால்வரையும் மேலும் கீழும் பார்த்தவர், ‘படார்’ என்று தோட்டக்காரனின் தலையில் அடித்தார். 
என்ன ஆச்சரியம்! ஐந்து நிமிடத்திற்குள் தோட்டக்காரன் உண்மையை ஒத்துக்கொண்டு, தன் டூல்ஸ் பெட்டியிலிருந்து என் ரோலக்ஸை கொண்டுவந்து ஒப்படைத்தான். 
எனக்கு இன்னும் வியப்பு தீரவில்லை.விசாரனையென்ற பெயரில் ஒரு சிறு கேள்வி கூட கேட்காமல், வந்த பத்தாவது நிமிடத்தில் எப்படி இந்த கான்ஸ்டபிலால் இதை இத்தனை சுலபமாக கண்டுபிடிக்க முடிந்தது. என் தோல்வியை மனதில் ஏற்றுக்கொண்டு அந்த ஆச்சரியத்திற்கான விடையை கான்ஸ்டபிலிடமே கேட்டேன். 
கான்ஸ்டபில், “இதுல இன்ன சார் பெரிய ஆச்சரியம். மொச புடிக்கிற நாய் மூஞ்சிய பாத்தா தெரியாது. இவன் திருடுனதுதான் இவன் மொகரையிலையே தெரியிதே!” என்று தனக்கு கிடைத்த புகழ்ச்சியை ஒதுக்கிவிட்டு, வடைபெற்றுக்கொண்டார். 
ந்த வித்தியாசமான அனுபவத்திலிருந்து எனக்கு ஒரே ஒரு உண்மை மட்டும் புரிந்தது. 
சில சமாச்சாரங்களுக்கு ஷெர்லாக் ஹோல்ம்ஸ் தேவையில்லை.’

‘கான்ஸ்டபில் கண்ணாயிரம் போதும்!‘ 
—-x—-