RSS

Monthly Archives: November 2011

புலம்பல்கள்

புலம்பல்கள்
கண்ணை விற்று ஓவியம் வாங்கி இருக்கிறோம்…
இக்கரைக்கு அக்கரை பச்சை….
-தமிழ்நாடு
கன்னிப்பெண் கண்ணீர் சிந்த
நீதிபதி களியாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறார்..
-பாரதம்..
ஊர் பற்றி எரிகிறது
மன்னன் பிடில் வாசிக்கிறான்…
-பாரதம்
-ரஞ்சித்குமார்
 
1 Comment

Posted by on November 26, 2011 in பத்மா மகன், Poetry

 

பாமரன்

பாமரன்

இது ஒரு அழகிய கூத்து
அழுகிய நாத்து…..

கறை படியாத மேகங்கள்
கருமை நிறமில்லா காகங்கள்…..

அணிந்தவன் நிர்வாகி
அணிவித்தவன் நிர்வாணி …..

பங்கு போட்டுத்தான் பந்தி
பாமரன் நிற்கும் இடம் சந்தி…..

தேடி சொன்னால் பல கோடி
தெருவில் கண்டது சில கோடி…….

மொத்தத்தில் ஒரு மாயத்தோட்டம்
ஆயிரம் மான்கள் கூட்டம்….

உண்மையை சொல்பவன்
தீவிரவாதி….

உரைத்ததை சொல்பவன்
தேசத்துரோகி……

பாமரன் ஞானியாகிறான்
பாரத தேசத்திலே…..

தகுதி:
18 வயது
வாக்காளர் அடையாள அட்டை..

நானும்
இன்று பாமரன்
நாளை ஞானி…….

தேவை பட்டால்
என் மீதும் பாயும்..

தே. பா.ச.

– ரஞ்சித்குமார்

 

தாய்-அம்மா

தாய்அம்மா

சுபமங்கள மஹாலில் நாளைய முகூர்த்தத்திற்கான வேலைகளை ஒருபுறம் மும்முரமாக கவனித்துக் கொண்டிருந்தார் நவநீதன். அன்றைய தினம் மாலை நிகழவிருக்கும் நிச்சயத்திற்கான ஏற்பாடுகள் ஏறக்குறைய முடிந்துவிடும் தருவாயில் இருந்தது.

வரவேற்பு பந்தலில் சந்தனம் குழைத்து, இனிப்புகள் நிரப்பி, ரோஜா மலர்களை பரப்பி,பன்னீரை குவளையில் நிரப்பி இவற்றை முறையாக எடுத்துவைப்பது முதல்அடுப்பங்கரையில் கேசரியின் இனிப்பும், இட்லி சாம்பாரின் காரமும், ஐஸ்கிரிமின் ஜில்லென்ற தன்மையும் பதமாக உள்ளதா என பார்ப்பது வரை எல்லா காரியங்களையும் சுழன்று சுழன்று கவனித்தாள் தாய்யம்மா.

இடையிடையே மணமகள் அறையினுள் கவனத்தை செலுத்தி ஏதேனும் அழுகுரல் கேட்கிறதா என்பதை கண்டறிந்து, எந்த தொந்தரவும் இல்லாமல் குழந்தையின் சிரிப்பு சப்தம் கேட்டால் நிம்மதி பெருமூச்சுடன் தனக்கென உள்ள ஆயிரத்தி எட்டு வேலைகளில் முழ்கிடுவாள்.

திருமணம் நிகழவிருப்பது ரிடயர்டு தாசில்தார் நவநீதனின் மகள் கயல்விழிக்கு. அவளிடம் முழுஉரிமை தந்தையைவிட, தாயயம்மாவுக்கே அதிகம். தான் பெறவில்லை எனினும் இருபத்திமுன்று வருடம் வளர்த்தவள் ஆயிற்றே . அந்த வீட்டில் தாயம்மாள் வேலை செய்தால் என்றாலும் நவநீதானிடம் மிகுந்த மரியாதையும் கயலிடம் அளவற்ற பாசமும் கொண்டிருந்தாள். கயலும் தாயம்மாளை அம்மா என்றே அழைத்தாள்.

நல்ல நேரம் நெருங்கிக் கொண்டிருக்கையில் நவநீதன் கயல்விழியை அழைத்து வருமாறு கூற தாயம்மாள் அறையினுள் சென்று மணமகள் அலங்காரத்திலிருந்த கயல் தன் குழந்தை ஆனந்தியோடு விளையாடுவதை நோக்கினாள். தாயம்மாள், கயல் தன்னிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டவுடன் அவளை உச்சி முகர்ந்து முத்தமிட்டாள். கை பிடித்து மேடைக்கு அழைத்து வந்து நிச்சய தாம்பூலம் மாற்றுவதை கண்டு மனதார வாழ்த்தி மகிழ்ச்சியுற்றாள்.

இனி மற்றவைகளை நவநீதனிடம் விடுத்து அறைக்கு திரும்பி தன் குழந்தை உறங்குவதை உறுதி செய்தவள், களைப்பு மிகுதியால் தானும் ஒரு மூலையில் படுத்து கண் அயர்ந்தாள்.மண்டபத்தில் அரங்கேறிக்கொண்டிருந்த வாத்தியங்களின் இசையோ, திரளாக வாழ்த்த வந்திருந்த மக்களின் ஆரவாரமோ அவளது ஆழ்ந்த தூக்கத்தை கலைக்கவில்லை.

ஆனால் திடீரென்று அழத்தொடங்கிய தன் குழந்தையின் குரல், வெளியே நிலவிய களேபரத்துடன் ஒப்பிடும் போது மெல்லியது தான். அப்படியிருக்க அந்த சினுங்கல் எவ்வளவு விரைவாக உடுருவிச்சென்று அவளது தூங்கிக்கொண்டிருந்த மூளையை தட்டி எழுப்பியதோ தெரியவில்லை, நொடிப்பொழுதில் கண்விழித்து குழந்தையை வாரி அணைத்து சமாதானப்படுத்தினாள், என்னம்மா, என்ன ஆச்சு என் அம்மாவுக்கு! என் ஆனந்தக் கண்ணம்மா!! என் தாயம்மா!!!” என்று.

!!!—!!!
 
 

053. THE TUNNEL


The Tunnel

Zenkai, the son of a samurai, journeyed to Edo and there became the retainer 
of a high official. He fell in love with the official’s wife and was discovered. In self-defence, he slew the official. Then he ran away with the wife.

Both of them later became thieves. But the woman was so greedy that Zenkai grew disgusted. Finally, leaving her, he journeyed far away to the province of Buzen, where he became a wandering mendicant.

To atone for his past, Zenkai resolved to accomplish some good deed in his lifetime. Knowing of a dangerous road over a cliff that had caused death and injury to many persons, he resolved to cut a tunnel through the mountain there.

Begging food in the daytime, Zenkai worked at night digging his tunnel. When thirty years had gone by, the tunnel was 2,280 feet long, 20 feet high, and 30 feet wide.

Two years before the work was completed, the son of the official he had slain, who was a skillful swordsman, found Zenkai out and came to kill him in revenge.

“I will gived you my life willingly,” said Zenkai. “Only let me finish this work. On the day it is completed, then you may kill me.”

So the son awaited the day. Several months passed and Zenkai kept digging. The son grew tired of doing nothing and began to help with the digging. After he had helped for more than a year, he came to admire Zenkai’s strong will and character.

At last the tunnel was completed and the people could use it and travel safely.

“Now cut off my head,” said Zenkai. “My work is done.”

“How can I cut off my own teacher’s head?” asked the younger man with tears in his eyes.



 
Leave a comment

Posted by on November 19, 2011 in 101 Zen Stories